tag:blogger.com,1999:blog-31282524.post8617771080166264475..comments2023-08-15T13:41:56.943+05:30Comments on கோபா: வீரபாண்டிய கட்டபொம்மன்கோபாhttp://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-31282524.post-46891983818965157292007-01-24T17:11:00.000+05:302007-01-24T17:11:00.000+05:30பாலன்..
மாற்றுக்கருத்துக்களையும் அறிந்திருப்பது ந...பாலன்..<br /><br />மாற்றுக்கருத்துக்களையும் அறிந்திருப்பது நன்று என்ற முறையில் ஒரு ஆலோசனை. <br /><br />தமிழ்வாணன் எழுதிய 'கிட்டபொம்மன்' என்ற நூலைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மீசைக்கார மாபொசி கட்டபொம்மனைப் பற்றி எழுதாதவரை திருநெல்வேலியைத் தாண்டி கட்டபொம்மன் அறிந்திருக்கப்படவில்லை. சிவாஜி நடித்து பேசிய வசனம் வந்தபிறகு அறியாதோர் யாருமில்லை என்றான கட்டபொம்மு வரலாறு.. கொஞ்சம் வரலாற்றுத் திரிபு மிக்கதாகத் தோன்றுகிறது. <br /><br />கண்டிப்பாக கட்டபொம்முவிற்கு எதிரான கருத்தை பரப்புவதான எண்ணம் எனக்கு இல்லை. என்றாலும் ஆராய்ந்து பார்ப்பது நலம். <br /><br />பிரமிப்புடன் பாஞ்சாலங்குறிச்சிக்குச் சென்று கட்டபொம்முவின் அரண்மணை இருந்த இடம் சென்று பார்த்தால், அதை விடப் பெரிய வீடுகளில் இன்று மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். மேலும், வானம் பார்த்த பூமியில் வரி கேட்டால் எங்ஙனம் வசூல் செய்ய முடியும். போதுமான விளைச்சல் இல்லை என்ற நயந்த வேண்டுகோள், சினிமாவில் சிவாஜிகணேசனின் "விளைச்சலில் பாடுபட்டாயா" என்ற கோபமாக உருமாறியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மற்றபடி.. கட்டபொம்மு ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட முதல் தமிழர்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.com