Wednesday, June 20, 2007

ஜனநாயகத்தின் மீது ஓட்டு கட்சிகளின் நம்பிக்கை ?


இது ஜனநாயக நாடு... நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என எப்போதும் மார்தட்டிக் கொள்ளுகின்றனர் ஓட்டுக் கட்சிகள்.

ஆனால் இவர்களுக்குதான் ஜனநாயகத்தின் மீது துளி கூட நம்பிக்கை இல்லை என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபிக்கின்றனர்.

தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, வாக்குப்பெட்டியை கடத்துவது என அனைத்தையும் செய்வது, இந்த ஜனநாயகவாதிகள் தான்.
இவர்களுடைய ஜனநாயகம் ஒவ்வொரு தேர்தலும் பல்லாயிரக்கணக்கான ரானுவத்தினரையும், போலீஸையும் வைத்து நிலைநாட்டப்படுகிறது.

************************************************************************************
மதுரை இடைத் தேர்தல்-ஆயுதங்களுடன் துணை ராணுவம் ரோந்து

ஜூன் 19, 2007

மதுரை: மதுரை மேற்கு தொகுதி தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் மத்திய துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத் தொகுதியில் வரும் 26ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. ஒரு பக்கம் அழகிரியின் அஞ்சா நெஞ்சன் படையினர், இன்னொரு பக்கம் அதிமுகவின் தென் மாவட்ட பெருந்தலைகள் என மதுரையே கதி கலங்கிக் கிடக்கிறது.

தேர்தலை அமைதியாக நடத்த மத்திய துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முதல் அவர்கள் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதட்டமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ள 21 வார்டுகளில் 24 மணி நேரமும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . இதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களிலிருந்து 2,000 போலீஸாரும், தமிழக சிறப்பு அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
************************************************************************************

Labels: ,

1 Comments:

Blogger கோபா said...

test

9:37 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home