Saturday, January 06, 2007

நவம்பர் புரட்சி நாள் !!

உழைப்பவனின்
கைரேகைகள்....
தேசத்தின்
முகவரியென்று
நிர்ணயிக்கப்பட்ட நாள் !

ஏழைகள்
உறக்கத்தில் கண்ட
சொர்க்கக் கனவுகள்
விழிப்பில்
நிஐமான நாள் !

சிவப்பு மழையினால்
ருஷ்ய மண்ணில்
பசுமை நிறங்கண்ட
புனித நாள் !

நட்சத்திரங்களின்
ஒளியை மட்டுமே
நம்பிக் கிடந்த
மக்களுக்கு
சூரியனை
அறிமுகப்படுத்திய
சரித்திர நாள் !

ஆணவத்தின்
அரண்மனைக் கதவுகள்
உடைக்கப்பட்ட நாள் !

வியர்வையின்
கண்ணீர்
துடைக்கப்பட்ட நாள் !

அந்தவசந்தத்தின்
கட்டியங் காரன்
லெனின்.

எங்கெங்கு சமத்துவ பூக்களின்
நறுமணம் வீசுகிறதோ....
அந்தப்பூச்செடிகளெல்லாம்
அவனால்
பதியமிடப்பட்டவை .

வெளிச்சங்கள் தீண்டவும்
நிழல்கள்
விழித்துக் கொள்கிற மாதிரி...
அவன்சிலிர்த்தெழுந்த போதுதன்
புரட்சி கண்விழித்தது
அந்த ஒளியைத் தேடித்தான்
எங்கள் பயணமும்.

-- நிர்மலா

(திருச்சி நவம்பர்
புரட்சிக்கலைவிழா கவிதை)


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home