Friday, October 26, 2007

எது கவிதை?

வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கிய காலம் முதல் தாம் வாழ்வதற்கான புதியவகை சாதனங்களை மட்டுமல்ல, புதியவகை உணர்ச்சிகளையும் படைத்தே வந்திருக்கிறது. படைப்புரீதியான இவ்வகை உழைப்புப் போக்கின் மூலம் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதே அறிவியல், கலைக்கான ஆளுமைமிக்க வரலாற்றுப் பாத்திரமாகும்.

அவ்வகை மனித முயற்சி, நாகரிகம் எதுவுமின்றி ""தான் எப்படியாவது பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும்'' என்பதற்காக சமூகத்தின் சரிபாதியான பெண்களின் இடுப்பைக் கிள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில கோடம்பாக்கத்து போக்கிரிகள். காரணம் கேட்டால் இவர்கள் கவிஞர்களாம்! சுற்றிலும் நம் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் சாதி தீண்டாமை அநீதிகள், ஒன்று சேர்ந்து வாழ்வதுபோல் நடிக்கும் இல்லறத்தின் புதிர்கள் இன்னும்பல சமூகக் கொடுமைகள் இவைகளை விண்டு பார்த்து விடைதேட முயன்று பாருங்கள். உங்கள் படைப்புக்கான ஆளுமை அங்கே காத்திருக்கிறது. கூட்டுத்துவ உழைப்பினால் வளர்ந்துவந்த சமூகத்தின் வரலாற்றை உணர்ந்து பாருங்கள், ""தான்'' என்ற அறியாமை வெட்கி விலகும். உயிர்த்துடிப்பான உழைக்கும் மக்களின் ஒருநாள் வாழ்க்கைப் போராட்டத்தை உற்றுப் பாருங்கள், நாம் மனிதர்களாகி விடுவோம். ""லூசுப்பையன்கள்'' திரியும் கோடம்பாக்கத்து ஒட்டுண்ணி இலக்கைவிட்டு வெளியே வாருங்கள். உணர்ச்சியுடனும் சுரணையுடனும் உழைக்கும் மக்கள் திரளினரால் படைக்கப்படும் புதிய சமூகத்திற்கான போராட்ட உணர்ச்சியில் கலந்து பாருங்கள். நாமும் கவிஞர்களாகி விடுவோம்.

அரசியலால் கலைத்தன்மை போய்விடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே ஆளும் வர்க்க அரசியலை நத்திப்பிழைக்கும் இலக்கிய வட்டங்களைத் தாண்டி பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலமைப்போடு ஒன்று சேர்ந்து பாருங்கள்! ஒரு புதிய சமூகத்தையே கவிதையாய் வடிக்கும் பேரார்வம் அங்கே உங்களுக்காகக் காத்து நிற்கிறது.
..

Labels:

Friday, September 14, 2007

அமெரிக்க பேரரசர் ஜார்ஜ் புஷ் ஆசியுடன் இந்திய ஓட்டுப் பொறுக்கிகள் வணங்கும்........ '123 விநாயகர்'

Tuesday, September 11, 2007

ஊரும், சேரியும் தனித்தனி - மனுதர்மம்....................! சென்னையும், செம்மஞ்சேரியும் பிரி பிரி - ஏகாதிபத்தியம் !!

உலக வங்கி வழங்கும் புதிய மனுநீதி.

சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழிந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தர, மேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப்பாத்திரங்களையும் பளிங்குத்தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள், சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.
..
உடலை உருக்கிப்போடும் கடின உழைப்பை ஈயும் இவர்களில் பலருக்கும் நல்ல உணவில்லை. இருக்க நல்ல இடமில்லை. வாடகை கொடுத்துக் கட்டுபடியாகும் நிலையில் வருமானம் இல்லை. எனவேதான் இவர்களில் பலரும் குடியிருப்பது குடிசைகளில். கழிப்பறை, குழியலறை இல்லாத, காலை நீட்டிக்கூட தூங்க முடியாத, கொசுப்படை தாக்குதலுக்குள் முடங்கிட இவர்களுக்குக் கிடைத்தவையோ பக்கிங்காம் கால்வாய், அடையாறு, கூவம் போன்ற நீர்வழிகளின் கரையோரங்கள்தான்.


நகருக்குள் கிடைக்கும் வேலைகளை-அதுவும் நிச்சயமில்லாத வேலையை- நம்பித்தான் இவர்களின் அன்றாடக் காலைப்பொழுதுகள் விடிகின்றன. இக்குடிசைவாசிகளில் 86 சதவீதம் பேருக்கு ஒருநாளைக்கு ஒருவேளைதான் உணவு. போதிய வருமானம் இல்லாததால் குடிசைவாழ் பெண்களின் உணவில் சத்து குறைந்து அவர்களில் 44 சதம் பேருக்கு இரத்த சோகை உள்ளது. இருப்பினும் எண்சாண் வயிறை நம்பி வாழவே தகுதியில்லாத குடிசைகளில் குடியிருப்பதால்தான் இவர்களுக்கு குடிசைகளை ஒட்டிய நாகரீகக் குடியிருப்புகளில் வீட்டு வேலைகளோ, குப்பை அள்ளுவதோ, கட்டிட வேலைகளோ கிடைக்கின்றன.

அதேபோல்தான் மெரீனா கடற்கரை, சாந்தோம் கடற்கரையை ஒட்டிக் குடியிருக்கும் மீனவர்களின் குடியிருப்புக்களும். மீன் பிடிக்கப் பயன்படும் வலைகள், கட்டுமரங்களை எளிதில் கடலுக்குள் கொண்டு செல்லவும், வலைகளை உலர்த்தவும், விரைவில் தொழிலுக்குச் செல்லவும் எனத் தேவையை ஒட்டிப் பல நூற்றாண்டுகளாக அவ்விடங்களில் மீனவர்கள் பாரம்பரியமாகக் குடியிருந்து வருகின்றனர்.

நிச்சயமில்லாத இந்த வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போட வந்துள்ளது, சென்னை-2026 எனச் சொல்லப்படும் மாஸ்டர் பிளான் திட்டம்.

குடிசைவாசிகள் வாழத்தகாத இடங்களில் வாழ்கிறார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களை சென்னையில் இருந்து அகற்றி மாநகர எல்லைக்கு வெளியே செம்மண்சேரிக்கு விரட்டத் திட்டமிட்டுள்ளனர்.

இம்மக்களால்தான் சென்னையின் நீர்நிலைகள் மாசுபடுவதாகவும், அவர்கள் நகரின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் மாஸ்டர் பிளான் குற்றம் சாட்டுகிறது.

கழிப்பறைகள் இல்லாத குடிசைமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நகரின் சுகாதாரமே கெடுவதாயும் குற்றம் சாட்டுகிறது.

நீர்நிலைகளை மாசுபடுத்துவதாகக் குற்றம் சாட்டி சென்னையை விட்டுத் துரத்த வேண்டும் என்றால் முதலில் துரத்த வேண்டியவர்கள், லட்சக்கணக்கான லிட்டர் கழிவை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் டைடல் பார்க் உள்ளிட்ட பல பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்களும், நட்சத்திர விடுதிகளும்தான். மூன்று நாளைக்கு ஒருமுறை வரும் நீரை சிக்கனமாக செலவளிக்கும் குடிசைகளால் நீர்நிலை கெடுகின்றது என்பதை குடிசைகளைப் பற்றி அறிந்த எவருமே நம்ப மாட்டார்கள்.

பின் எதற்காக குடிசைகளைக் காலி செய்யச் சொல்லுகிறார்கள்?

மாஸ்டர் பிளானிலேயே இதற்கான காரணம் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப்பயணிகளின் கண்களுக்கு இக்குடிசைகள் வெறுப்பை உண்டுபண்ணுகின்றனவாம்.

வளர்ந்து வரும் சென்னையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகுந்த வண்ணம் மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் மாஸ்டர் பிளான். இதனை டாக்டர் கலைஞரோ,புரட்சித் தலைவியோ சிந்தித்து உருவாக்கவில்லை.
உலக வங்கி எனப்படும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கி, அதற்கு எது எதெல்லாம் இடைஞ்சலாய் உள்ளதோ அவற்றை எல்லாம் தான் உருவாக்க இருக்கும் நவீன சிங்காரச் சென்னையை விட்டு அப்புறப்படுத்தச் சொல்லி கட்டளை இடுகிறது. இந்த திட்டத்திற்கு அது கடனாக வழங்கி இருக்கும் தொகை மட்டும் ரூபாய் 25 ஆயிரம் கோடிகள்.

இனிமேல் சென்னைக்குள் மாவரைக்கும் ஆலைகளோ, ஆடு மாடு வளர்ப்போ, குடிசைகளோ, மீனவர்களின் கட்டு மரங்களோ, சென்னை கடற்கரையின் பலூன், சோளக்கதிர் கடைகளோ இருக்கக் கூடாது. வெளியேறுங்கள் எனக் கட்டளை இட்டுள்ளது, உலக வங்கி. அதனை இந்த அரசு நிறைவேற்றுகிறது. சென்னையின் குடிசை மக்களில் 75 ஆயிரம் பேரை செம்மண்சேரிக்கு அப்பால் குடியேற்றப் போகின்றனர். ஏற்கெனவே அடையாறு நதிக்கரை ஓரக் குடியிருப்புக்களை புல்டோசர்களால் தரை மட்டமாக்கி 1500 குடும்பங்களை இடம் பெயரச் செய்தும் விட்டனர். 7300 பேருக்கு வெளியேற்ற நோட்டீசு வழங்கி விட்டனர். படிப்படியாக அனைத்து குடிசைவாசிகளையும் துரத்தி விட்டு சென்னையை அழகுபடுத்தப் போகிறார்களாம்.

குடிசைகளை அகற்றச் சொல்லும் அரசால், அதே குடிசைகளை இருக்கும் இடங்களிலேயே காங்கிரீட்டுகளாகக் கட்டித்தர இயலாதா?அடையாறு பூங்கா எனும் ஊதாரித் திட்டத்துக்கு மட்டும் ரூபாய் 100 கோடி ஒதுக்க இயலுகிற அரசால் குடிசைகளை மேம்படுத்த இயலாதா?


போலீசுக்காரர்களுக்கு மட்டும் பளபளப்பான அடுக்கு மாடிக்குடியிருப்புகள் கட்டும் அரசுக்கு குடிசைகளை நகருக்குள்ளேயே நவீனமாக்கித்தர வக்கில்லையா?

திறந்த வெளியில் மலம் கழித்து நோயைப் பரப்புகிறதாய் குடிசை மக்கள் மீது குற்றம் சாட்டும் சென்னை மாநகராட்சி ஏன் இதுவரை போதிய அளவில் கழிவறைகளைக் குடிசை மக்களுக்குக் கட்டித் தரவில்லை?

பொதுக்கிணறு, குளங்களை தலித்களுக்கு மறுத்து விட்டு தலித்களை சுத்தமற்றவர்கள் எனக் கூறும் பார்ப்பனீய வஞ்சகத்துக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

அங்கீகாரம் பெறாமல் விதிகளை மீறி கோடிக்கணக்கில் கட்டிடம் கட்டியவன் கூட உள்ளே இருக்கலாம். உழைக்காமல் தரகு வேலை பார்ப்பவன் உள்ளே இருக்கலாம். முழுக்க முழுக்க அந்நிய நாட்டுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் உள்ளே இருக்கலாம். ஆனால் இந்த மாநகரின் மைய நரம்பாய் உழைக்கின்ற குடிசைவாசிகள் மட்டும் நகருக்குள்ளே இருக்கக் கூடாதா?

செம்மண் சேரியில் இருந்து பிழைப்பு தேடி சென்னை வருவதும் இனி சுலபமில்லை எனும்படிக்கு, மாநகரப் பேருந்துகளைக் கூட மாற்றி அமைத்து வருகின்றனர். 4ரூபாய் கொடுத்து பயணம் செய்த வெள்ளைப் பலகை (ஒயிட் போர்டு) பேருந்துகளைக் குறைத்து அதே தடங்களில் சொகுசுப் பேருந்துகளை விட்டு 11 ரூபாய் வரை கொள்ளை அடிக்கத் தொடங்கி விட்டது, அரசு. ஆக, செம்மண் சேரியில் இருந்து தினமும் பயணித்து, கிடைக்கப் போகும் கொஞ்ச நஞ்ச ஊதியத்தையும் வழிப்பறி செய்யப் போகிறது அரசு.

இக்கொடுமைகளை அடுத்து வரும் அரசு தீர்த்து விடும் என்றோ, அல்லது வேறு ஏதாவது ஓட்டுக் கட்சி இதனைப் போராடிப் பின் வாங்க வைக்கும் என்றோ நம்ப இடமில்லை.

உலக வங்கியின் கட்டளைப்படி ஆடுபவர்கள்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும். உலகவங்கி போட்டுத்தந்திருக்கும் மாஸ்டர்பிளானில் இச்சதித் திட்டம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் கேப்டன் முதல் ராமதாசு வரை, வலது இடது கம்யூனிஸ்ட்கள் முதல் பாஜக வரை எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த அநியாயத் திட்டத்தைக் கண்டித்திருக்கின்றதா?

25000 கோடிகள் வழங்கும் உலக வங்கியின் கட்டளைக்கெல்லாம் அடிபணியும் அரசு நமக்கு இனியும் தேவையா?

கிழக்கு கடற்கரை சாலை, ராஜீவ் காந்தி சாலை, பத்துக்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் என அனைத்திலும் உலக வங்கி கடனுதவி செய்து அதற்கான கப்பத்தை அள்ளிக்கொண்டு செல்கிறது.

மாஸ்டர்பிளானை மட்டும் தனியே எதிர்ப்பதனால் இச்சதியை முறியடித்திட இயலாது. உலகமயம்,தனியார் மயம், தாராளமயம் ஆகியவற்றின் துணையுடன் உலக வங்கி மூலமாக நம் நாடு காலனியாக்கப்பட்டு வருகிறது. காலனியாக்கத்தை எதிர்த்து விடுதலைப்போர் நடத்த வேண்டிய சூழலில் நாடு இன்றுள்ளது.

உழைக்கும் மக்களின் இருப்பிடங்கள் அகற்றப்படுவதை எதிர்த்து போராடவும், மாஸ்டர் பிளானைக் கைவிடவும்,பன்னாட்டுக் கம்பெனியின் கந்துவட்டி நிறுவனமான உலக வங்கியின் சதியில் இருந்து நம் மக்களையும் நாட்டையும் காப்பாற்றவும் உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.
Related:..

Labels: , ,

Saturday, September 08, 2007

சென்னை பாண்டிபஜாரில் அணுகுண்டு விழுந்தால் !

ராணுவ ஒப்பந்தம் என்ற பெயரில் 123 உள்பட நாட்டையே அடிமையாக்க கூடிய சரத்துகளுடன் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.


வெள்ளைக்காரனுங்க ஆரம்பித்த காங்கிரஸ் என்கிற கம்பெனி நாட்டை விற்பதை வெகு விரைவாக செய்துகிட்டு இருக்கார்கள். பா.ஜ.க என்கிற மதவெறி கட்சி இதையே சொல்லி மீண்டும் ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறார்கள். எதுக்கு இதே பணியை தொடரந்து செய்யத்தான்.


'என்ரான்' என்கிற கொள்ளைக்காரனை கொண்டுவருவதற்கு இந்த இரண்டு பேரும் சேர்ந்தே வேலை செய்ததை திரும்பி பார்த்தால் புரியும். அன்றைக்கு நரசிம்ம ராவ், அலுவாலியா, அடுத்து வந்த வாஜ்பாய், பால்தாக்ரே என்ற அடிவருடி லிஸ்டே என்ரானுக்கு வக்காலத்து வாங்கியது. குறிப்பாக இன்றைக்கு 123 யினால் ஆபத்து இல்லை என கூட்டம் போட்டு திரிகிற கார்த்திக் சிதம்பரம் என்கிற புதிய அடிமையின் அப்பா சிதம்பரம் தான் என்ரானின் வழக்கிலாக இருந்தவர்.


அடுத்து போலி கம்யூனிஸ்டுகள்...கேட்கவே வேண்டாம்...அப்பட்டமாக எதிரியாக மாறி ஆளும் வர்க்கத்துக்கு வேலை செய்கிறார்கள். 2 வருஷமாக ஒப்ப்ந்தத்தை பற்றி வாய்திறக்காமல் இப்ப எதிர்க்கிற மாதிரி நடிச்சுட்டு...அடுத்து கூட்டு ராணுவ நடவடிக்கையினை எதிர்க்க கூட்டம் போட்டு கொண்டு இருக்கிறாரகள். இப்படி கம்யூனிஸ்டு பெயரில் ஆளும் வர்க்க அடியாள் வேலை செய்கிறதுக்கு ஒரு கட்சி இந்தியாவில....இப்ப மட்டுமா...போலி சுதந்திர காலத்துல இருந்தே காங்கிரஸ் க்கு வாலாக செயல்பட்டவர்கள் ஆயிற்றே.


கூட்டு குழுவின் முடிவினை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கபில்சிபில் சொல்ல போலிகள் அப்படியெல்லாம் கிடையாது என்று இவர்களாகவே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.


123 ஒப்ப்ந்தமா? நிர்பந்தமா? என்று வெளியீடு போட்டு மக்களை குழப்புகிறாரகள். இவர்கள் அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் பாருங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்...அணுசக்தி ஒப்பந்தம் என்பது நாட்டை அடிமையாக்க கூடிய பல சரத்து இருக்கு, தற்போது வெறும் 3 சதவீதம் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை 7 சதவீதம் என்று 2020 ல் மாற்ற 5 லட்சம் கோடியினை போடப்போறேன் என்பது என அனைத்தையும் விட்டுட்டு பாதுகாப்பு என்கிற ஒரு விஷய்த்தை பார்க்கலாம்.


சுனாமி வந்தப்ப பார்த்தோமானால் 10 நாட்களுக்கு பிணத்தை கூட அப்புறப்படுத்த வக்கில்லாமல் இருந்தது அரசு.

  • படிப்பறிவு அற்ற மக்களுக்கு
  • பாதுகாப்பு பற்றி ஒன்றும் தெரியாத மக்களுக்கு

இவர்கள் அதிகப்படிய கொண்டு வர இருக்கும் அணுசக்தி உலைகள் என்பது நாளை விபத்துகுள்ளானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே உள்ளது. இது கூட நாங்கள் சொல்லவில்லை, இப்படி நாட்டை மறுகாலனியாக்குவதற்கு தோல் கொடுத்து வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இதழ் ஒன்றில் தானுங்க இந்த செய்தி வந்துள்ளது.

Related:..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
.123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

Labels: ,

Thursday, September 06, 2007

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை - தீக்கொழுந்தில் இருந்து !

Wednesday, September 05, 2007

உங்களது எதிர்காலத்துக்காகவே இதைச் செய்கிறேன் ? - மண்மோகன் !!

Related:..

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!

.
123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..

60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!


மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்


Labels: , ,

Tuesday, September 04, 2007

வைக்கம் போராட்டம் : பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்தச் சாட்சிகள் !

நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!

இன்று நாடு மறுகாலனியாக்கப்பட்டு வருவதன் உச்சக்கட்டம் தான் அணுசக்தி ஒப்பந்தம் , இந்தியாவின் அரைகுறை இறையாண்மையையும் காவு கேட்கிறது.

2005 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்து தான் இந்த 123 ஒப்பந்தம். 123 ஒப்பந்தம் உள்பட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் (நாட்டை அன்னியனுக்கு விற்பதில்) ஒத்து ஊதி இருந்திட்டு இப்ப எதிர்க்கிற மாதிரி நடிக்கிற போலி கம்யூனிஸ்டுகளை போல ஒத்து ஊதின இன்னொரு சுகபோகி நம்ம அரசவை கோமாளி கலாம்.

லட்சக்கணாக்கான விவசாயி தற்கொலை செய்த நாட்டில், 83 கோடி பேருடைய தினசரி வருமானம் ரூ 20 ஆக இருக்கும் நாட்டில் அனைத்தையும் மூடி மறைத்து இந்திய நாடு 2020 வல்லரசு ஆகிவிடும் என்று நாடு படுதீவிரமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை மூடிமறைத்த இந்த கோமாளியும் 2005ல் போடப்பட்ட அடிமை சாசனம் (123) பற்றி வாய் திறக்கவே இல்லை.

இப்போது அடிமை சாசனம்(123) அமுல்படுத்த போகிற போது எதிர்க்கிற மாதிரி நாடகம் ஆடுகிற போலிகளை விட அப்பட்டமான அமெரிக்க அடிமை நாயாக காட்டி கொண்டு இருக்கிறார் கலாம்.

விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றாளர்கள், பத்திரிக்கையாளார்கள் என அனைவரும் 123 என்பது ஒரு அடிமை சாசனம் என்று கிழித்து வருகின்ற இந்த சூழ்நிலையில்; கலாம் நேற்று 'அணுசக்தி ஒப்பந்தம் அபூர்வமானது; முக்கியமானது' என்று கூறி தான் ஒரு கோமாளிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.


இந்த ஆளு விஞ்ஞானியாக இருந்திருந்தால் "அடிமை சாசனம்" பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும். கோமாளி யாச்சே ! அதுனால தான் ஒப்பதத்தைப் பற்றியோ அதனுடைய சரத்துகளைப் பற்றியோ வாய்திறக்காமல் ஒப்பந்தம் முக்கியமானது என்று 'மண்' மோகன் சப்பைக்கட்டுகளை விட கேவலமாக சப்பைக்கட்டு கட்டுகிறார்.

இதை விட அபாயகரமானது கோமாளியின் ' 2020 வல்லரசு' கனவு !
.
நாட்டின் நிலை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் கலாம். மறுகாலனியாதிக்கத்துக்கு உதரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் -
  • சென்னை குடிசைகளில் 86% பேர் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறார்கள்..
  • 44% குடிசைப்பெண்கள் ரத்த சோகையால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்...
  • ஆட்சியாளர்களோ நிமிட்ஸ் கப்பலில் வந்திறங்கும் அமெரிக்க கொலையாளிகளுக்கு கோடம்பாக்கத்து துணைநடிகைகளைக் கூட்டிக்கொடுத்துக் காவல் நிற்கிறார்கள்
  • சென்னை குடிசைகளில் 21 சதவீதம் இளைஞர்களுக்கு ஒரு வேளை பட்டினிதான் பரிசாகக் கிடைக்கிறது.
  • நகர விரிவாக்கம் என்று அவர்களில் 75000 குடும்பங்களை சென்னையை விட்டுத் துரத்த உத்தரவு போடுகிறது உலக வங்கி..


இப்ப வேலை கொடு என்கிற மக்களை பார்த்து அணுகுண்டு தர்றேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்;

கனவு காணச்சொல்லுகிறார் கலாம்.

இப்படிப்பட்ட கோமாளியின் யோசனைகளை வைத்தும் சிலர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க (மக்களை கொள்ளையிட) கிளம்பி இருப்பது; கலாம் ஒப்புதல் வாக்குமூலத்தை விட நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது என்பதை காட்டுகிறது.

Related:
..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!.

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !
..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!

மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

Labels: , ,

"அடிமை மோகம் அழியும்வரையில் விடிவு இல்லை, விடுதலையும் இல்லை" PART II