Tuesday, September 12, 2006

பாரதிதாசன் பாடல்கள்

"உலகம் உன்னுடையது"

பள்ளம் பறிப்பாய், பாதாளத்தின்

அடிப்புறம் நோக்கி அழுந்துக ! அழுந்துக !

பள்ளந்தனில் விழும் பிள்ளைப் புச்சியே,

தலையைத் தாழ்த்து ! முகத்தைத் தாழ்த்து !

தோளையும் உதட்டையும் தொங்கவை ! ஈன

உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு !

நக்கிக்குடி, அதை நல்ல தென்று சொல் !

தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்

தாழ்ந்து போ ! குனிந்து தரையைக் கெளவி

ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு !

மொட்டுப் புச்சியே ! புன்மைத் தேரையே

அழு, இளி, அஞ்சு, குனி, பிதற்று !

கன்னங் கடுத்த இருட்டின் கறையே,

தொங்கும் நரம்பின் தூளே ! இதைக்கேள் ;

மனிதரில் நீயுமோர் மனிதன் ; மண்ணன்று ;

இமை திற ; எழுந்து நன்றாய் எண்ணுவாய் ,

தோளை உயர்த்துச் சுடர் முகம் தூக்கு !

மீசையை முறுக்கி மேலே ஏற்று !

விழித்த விழியில் மேதினிக் கொளி செய் !

நகைப்பை முழக்கு ! நடத்து லோகத்தை !

உன் விடு - உனது பக்கத்து வீட்டின்

இடையில் வைத்த சுவரை இடித்து

வீதிகள் இடையில் திரையை விலக்கி

நட்டொடு நாட்டை இணைத்து மேலே

ஏறு ! வானை இடிக்கும் மலைமேல்

ஏறி நின்று பாரடா எங்கும் ;


எங்கும் பாரடா இப்புவி மக்களைப்

பாரடா உணது மானிடப் பரப்பை !

பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் !


'என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய

மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் !

அறிவை விரிவு செய் ; அகண்டமாக்கு !

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை !

அணைந்து கொள் ! உன்னைச் சங்கமமாக்கு ,

மானிட சமுத்திரம் நானென்று கூவு

பிரிவிலை எங்கும் பேத மில்லை

உலகம் உண்ண உண் ! உடுத்த உடுப்பாய் !

புகல்வேன் ; ' உடைமை மக்களுக்குப் பொது '

புவியை நடத்துப் பொதுவில் நடத்து !

வானைப் போல் மக்களைத் தாவும்

வெள்ளை அன்பால் இதனைக் -

குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே !!






Labels:

Saturday, September 09, 2006

ஒரு மன்னன் மனிதனான கதை- 2

பூ இ மன்னன்

"ஆனால் இன்று , எனக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன் முறையாக, முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. "

"இன்று தான் கம்யூனிஷ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது.நான் உண்மையான மனிதனானேன்."






http://blackboards.blogspot.com/2006/09/1.html

Friday, September 01, 2006

ஒரு மன்னன் மனிதனான கதை- 1

பூ இ மன்னன்

"ஆனால் இன்று , எனக்கு சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன் முறையாக, முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. "

"இன்று தான் கம்யூனிஷ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது.நான் உண்மையான மனிதனானேன்."