Thursday, May 31, 2007

கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்



மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.

ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்ததங்க
ஹெல்மெட் தந்திருப்பார்களோ!

விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?

'வாக்கு வங்கி'வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?-

நன்றி - Socrates

Labels:

கார்ப்ரேட் கட்சிகளின் அட்டவணை 1.0





வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.


Related :
-
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
-
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
-
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
-
சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!
-
பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்

Labels: ,

Wednesday, May 23, 2007

சிறு காய்கறி & மளிகைக் கடைக்காரர்களை விழுங்க வரும் ரிலையன்ஸ் பிரஸ்

Monday, May 21, 2007

தள்ளுவண்டி & தரைக்கடை வியாபாரிகளை விழுங்கும் ரிலையன்ஸ் பிரஸ்

Saturday, May 19, 2007

ரிலையன்ஸ் பிரஷ் முற்றுகை - தோழர் மருதையன் உரையின் குறுந்தகடு வெளியீடு

சிறுவணிகம் சிறு தொழில்கள் உயர்த்திப்புடி ! சூறையாடும் ரிலையன்சை துரத்தியடி !

21-04- 2007 புரசைவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் உரையினை குறுந்தகடாக வெளியீடப்பட்டு உள்ளது.



speechAgainstRelianceFresh
speechAgainstRelia...
Hosted by eSnips

நன்கொடை ரூ 25

பிரதிகள் கிடைக்குமிடம் :

புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி: puthiyakalacharam@rediffmail.com
-
Related Posts:

Labels: , ,

Friday, May 18, 2007

சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாட மீண்டும் அனுமதி மறுப்பு


நேற்று(மே 17) மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ் அமைப்பினருடன் சிவனடியார் ஆறுமுகச்சாமி மீண்டும் சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் பாட நுழைய முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி அனைவரையும் கைது செய்தனர்.
Related :

Labels: ,

Thursday, May 17, 2007

இந்திய ஆட்சியாளர்களின் ட்ரையாஜ் கொள்கை !!

சாலை சந்திப்புகளில் நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஒட்டிகள்,அதில் பயணம் செய்பவர்களுக்கு ரூ 600 அபராதம் விதிக்கப்படும் இப்படி டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர். ஏன்னா வரும் 2012-ல் டெல்லில் காமன்வெல்த் போட்டி நடைபெற இருக்கிறது. காமன்வெல்த் போட்டி நடைபெறும் போது பிச்சைக்காரர்கள் இருந்தால் வருகின்ற பன்னாட்டு வீரர்கள் இந்திய நாட்டை கேவலமாக பார்ப்பார்கள் என்று பிச்சைக்காரர்களை ஒழிக்க அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக யோசிக்கும் போது இப்படி பிச்சைக்காரர்களை ஒழிக்கவே ஒரு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் 2002-ல் நிறைவேற்றப்பட்டு உள்ளது தற்போது தெரியவந்தது. அதன் படி சாலை சந்திப்புகளில் காத்து நிற்கும்போது பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடும் வாகன ஓட்டுனர்களுக்கும், அதில் பயணம் செய்பவர்களுக்கும் அபராதமாக ரூ 600 /- விதிக்கப்படும். இதனை தற்போது அமுலாக்க முடிவு செய்து உள்ளனர்.

-
"பிச்சை போடுபவர்கள் இருந்தால்தான் பிச்சை எடுப்பவர்கள் இருப்பார்கள் எனவே பிச்சை போடுவதை தடுக்கிறோம்" என்கிறார்கள்.இதே கண்டுபிடிப்பைக் கொண்டு தான் மும்பையில் நகரை அழகுபடுத்த போகிறோம் என்று தாரவி பகுதியில் இருந்த சேரிகளை காலிசெய்தார்கள், சென்னையில் மெரீனா கடற்கரையை அழகுபடுத்த என்று கடலோர குப்பங்களை காலிசெய்தார்கள்.
-
இன்றைக்கு இந்த பெரிய நகரங்களின் ஜொலிக்கும் கட்டிடங்களும், மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும் இந்த மக்களின் உழைப்பில் உருவானது. ஒவ்வொரு கட்டிடம் கட்டும்போது ஒரு தொழிலாளி உயிரிழக்கிறான்.இப்படி தங்களது உயிரையே கொடுத்துதான் பெரிய நகரங்களை உருவாக்கினார்கள்.இன்று இந்த மக்களையே அசிங்கம் என்று ஒழிக்க முடிவு செய்து குப்பைப்போல வீசியெறிய முடிவு செய்து விட்டார்கள்.
-
இவ்வாறு நாட்டின் பெரும்பான்மை மக்கள் இவர்களின் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினால் வாழ்க்கையை இழந்து தெருக்களில் வீசியெறியப்பட்டு வருகின்றனர்.
-
இதை நேரடியாக நீங்கள் பார்க்கலாம்.சில்லரை வணிகத்தில் இன்றைக்கு ரிலையன்ஸ் உள்ளிட்ட பராசுர கம்பெனிகளை அனுமதித்து சிறு மளிகை கடைகாரர்களையும், சிறு காய்கறி கடைக்காரர்களையும் வெளியேற்றுகிறார்கள்.இதனால் சிறுகடை வைத்து இருப்பவர்கள் தள்ளுவண்டி கடைக்கு மாறி வருகின்றனர். அதேபோல தள்ளுவண்டிக்கடைக்காரர்கள் தரைக்கடைக்காரர்களாகவும், தரைக்கடைக்காரர்கள் கூலி தொழிலாளர்களாகவும் மாறி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மை மக்கள் சொல்கிறார்கள் தாங்கள் தங்கள் உணவை இரண்டு வேலையாக குறைத்து கொண்டோம் என்று.
-
ஏற்கனவே கூலித்தொழிலாளர்கள் போன்றவர்கள் வாழவழியற்று ஒன்று தற்கொலை செய்து கொள்கின்றனர் அல்லது சிலர் பிச்சையெடுக்கின்றார்கள்.இப்படி இந்த அரசின் மூலம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டவர்களுக்கு இன்று பிச்சைபோடுவதை தடுக்கப் போகிறார்கள். இது பிச்சைக்காரர்களை கொலைசெய்வதே ஆகும்.நேரடியாக பிச்சைக்காரர்களை கொல்ல இன்றைய சமுதாயம் ஒத்துக்கொள்ளாது என்பதால் இப்படி பிச்சை போடுபவர்களை நிறுத்தி விட்டால் தன்னாலே பிச்சைக்காரர்கள் செத்து விடுவார்கள்.
-


-
இவ்வாறு இவர்கள் எடுக்கும் நடவடிக்கை ஒரு வகையில் ட்ரையாஜ் கொள்கை போல தான் உள்ளது.அது என்ன ட்ரையாஜ் கொள்கை என்கீற்களா. ட்ரையாஜ் என்பது மெடிக்கல் எமர்ஜென்சிக்காக ஏற்படுத்தப்பட்ட வார்த்தை.அதாவது ஒரு விபத்து ஏற்பட்டவுடன் அதில் ஒரு சிலர் எப்படியும் இறந்து விடுவார்கள் எனில் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வது வீண் என்று விட்டுட்டு மற்றவர்களை காப்பாற்றுவது.
-
"எப்படியும் எதிர்காலத்தில் மக்கள் பெருக்கத்தினால் சாப்பாடு, நீர் இல்லாமல் பலர் இறக்கத்தான் போகிறார்கள், அதனால் எல்லோரையும் அழைத்து செல்வதை விட அதில் பாதிப் பேரை பட்டினி போட்டே கொன்ற வேண்டியது தான்" இதுதான் அமெரிக்கா போன்ற வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட ட்ரையாஜ் கொள்கை.
-
இதனைதான் ஏழை, எளிய நாடுகளின் மீது இவர்கள் இன்று நடைமுறைப்படுத்துகிறார்கள்.தனக்கு கொள்ளையடிக்க அனுமதிக்காத நாடுகளின் மீதும்,
தன் முடிவுகளை ஏற்காத - ஆதரிக்காத நாடுகளின் மீது பொருளாதார தடை என்ற பெயரில் இந்த ட்ரையாஜ் கொள்கை நடைமுறைப்படுத்துகின்றனர்.
-
"நாம் உதவிகள் அளித்துக்கொண்டே இருக்கத்தான் இந்த நாடுகளின் மக்கள் குழந்தைகளை மட்டும் பெற்று கொண்டே திரிகிறார்கள்"இப்படிதான் இன்று ஆப்பிரிக்க, ஆசிய போன்ற மூன்றாம் ஏழை எளிய நாடுகள் பற்றி அமெரிக்க பிரஜைகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
-
ஒட்டுமொத்த உலகத்திற்கும் அமெரிக்காதான் படியளப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏழை நாடுகளின் மக்கள் உழைக்காமல் அமெரிக்காவின் பிச்சைக்காசில் உயிர் வாழ்வதாகக் கருதுகிறார்கள்.
-
"பிச்சைகாரர்களை ஒழிக்க ,பிச்சைப்போடுவதை நிறுத்தினாலே போதும்" என்று "இந்தியா போன்ற ஏழை நாட்டுப் பிரஜைகளை (பிச்சைக்காரர்களை) ஒழிக்க (பட்டினி போட்டு சாகடிக்க) அமெரிக்கா தரும் உதவிகளை நிறுத்த வேண்டும்",-இப்படி தான் சிந்தனைரிதியிலே அமெரிக்கனை மாற்றி உள்ளார்கள்.
-
ஆனால் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மக்கள் இப்படி வறுமையில் இருப்பதற்கே இவர்கள் கொளுத்து திரிவது தான் காரணம். இன்றைக்கு உலக மக்கள் தொகை 600 கோடி. இதில் அமெரிக்க மக்கள் தொகை 36 கோடி. அதாவது 6%. ஆனால் இந்த 6% தான் உலக உற்பத்தியில் 40% சாப்பிடுகின்றனர். மீதம் உள்ள 564 கோடிப்பேர் அதாவது 94% பேர் 60% உற்பத்தியை சுவீகரிக்கிறார்கள்.
-
இப்படி ஒட்டுமொத்த உலகின் உழைப்பை உறிஞ்சிக் குடித்துவிட்டு, அவர்களைப் பிச்சைக்காரர்களாக பார்க்கிறான் அமெரிக்கன்.இதேபோலத்தான் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சிலர் 5 இலக்க, 6 இலக்க சம்பளம் வாங்க பல லட்சம் பேரைப் பிச்சைகாரர்களக மாற்றி, அவர்களை ஒழிக்கிறோம் என்று இப்போது கிளம்பியுள்ளார்கள்.
-
பிச்சைக்காரர்களை ஒழிக்க, பிச்சை போடுபவர்களுக்கு அபராதம் என்பதா தீர்வாக இருக்க முடியும். ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு இந்த அரசாங்கம் தான் 300,400 என பிச்சை போட்டு வருகிறது. ஆனால் உண்மையாக பிச்சைக்காரர்களை ஒழிக்க என்ன செய்ய வேண்டும், பிச்சைக்காரர்கள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
-
அதற்கு இவர்கள் தங்களின் தனியார்மய, தாராளமய , உலகமய கொள்கைகளை கைவிட்டு , பன்னாட்டு & தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு பதில், மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஆனால் இதை இந்த ஆட்சியாளர்களால் செய்ய முடியுமா என்றால் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னா இந்த அமைப்பே பன்னாட்டு,தரகு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதற்குள் மக்கள் நலன் என்று ஒன்றை சித்திக்க கூட முடியாது.
--
--
Related :
-
-
-
-
-
-
-

Labels: , ,

Sunday, May 13, 2007

ராஞ்சியில் ரிலையன்ஸ் பிரஸ் கடை தகர்ப்பு - சென்னையில் எப்போது ?

Related Posts:

Labels: , ,

Friday, May 11, 2007

பதவி ஆதாயத்துக்காகத் தொடரும் படுகொலைகள்!

ஒரு மாநில முதலமைச்சரின் மகன், பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு வாரிசு, மந்திரி - கலெக்டர் முதல் ஏட்டு எடுபிடி வரை வணங்குமளவுக்கு அதிகார பலம், ஒரு முன்னாள் அமைச்சரையே கொன்றாலும் ஒரு துளி சேதாரமின்றி நடமாட முடியுமென்கிற அரசியல் பலம், மதுரை மாவட்டத்தையே ஆட்டிவைக்கும் குண்டர் செல்வாக்கு, இத்தனைக்கும் மேலாக ஒரு குறுநில மன்னன் போல தொண்டர் படை பரிவாரங்களின் மூலம் தென்மாவட்டங்கள் முழுவதும் பரவியிருக்கும் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கம் இவைதான் முக. அழகிரி.

இதற்கும் சற்றும் குறையாத பணபலம், அரசியல் அதிகார பலம், தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள தொண்டர், குண்டர் பலம், திமுக வில் முக்கிய பொறுப்பு, அரசாங்கத்தில் அமைச்சர் அந்தஸ்து இவைதான் முக. ஸ்டாலின்.

தந்தை திமுகவிலும், மத்திய அமைச்சரவையிலும் மிக முக்கியமான் அமைச்சராகப் பதவி வகித்தவர், தனையன் பத்திரிகை, தொலைக்காட்சி என வெகுஜன ஊடகங்களை ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டவர், திமுகவில் வளர்ந்து வரும் செல்வாக்கு, மத்திய அமைச்சரவையில் முக்கியமான தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நூட்ப துறை அமைச்சர் , இவைதான் தயாநிதி மாறன்.

இந்த மூன்று பேருக்கும் உள்ள ஒற்றுமை திமுக தலைமையைக் கைப்பற்றும் இவர்களது கனவு . இன்றைக்கு கருணாநிதி, மாறன் குடும்பத்திற்கு இந்தியா முழுவதும் - உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, தமிழகத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு இதன் மூலம் நிறைவேறும். இந்த கனவுதான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை எதிர்எதிராகத் திருப்பிள்ளது.

இவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இவர்களது ஆதரவாளர்களை வைத்து இவர்களுக்கு , இவர்களே விழா எடுப்பதும், பாராட்டிப் புகழ்வதும் தொடர்ந்து வருகிறது.
அழகிரியின் பிறந்தநாளுக்கு மதுரை நகரையே அல்லகோலப்படுத்தி விளம்பரங்கள் வாழ்த்துக் கட் அவுட்கள், தமுக்கம் மைதானம் முழுவதும் போடப்பட்ட அழகிரியின் ஓவியம், அதை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிடும் அழகிரி, பிறந்த நாள் விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு கேக் வெட்டுவது என ஆடம்பரத் திருவிழா போல் நடந்த அந்த விழாவில் தெரிந்ததெல்லாம் அழகிரியின் செல்வாக்கு, கருணாநிதியின் சமீபத்திய நெருக்கம் ஆகியன.

இதேபோல ஸ்டாலினும் தன் பங்குக்கு தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களின் மூலம் பல விழாக்கள், வாழ்த்துக்கள் என வாங்கிக் குவித்துத் தனது இமேஜை சரி செய்ய, தயாநிதி மாறனோ அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி கருணாநிதியின் செல்லப்பிள்ளையாக, பொறுப்பான மத்திய அமைச்சராக, மாநில அரசு எடுக்கும் எல்லா திட்டங்களிலும் விழாக்களிலும் தனது தலையீட்டை உறுதி செய்து, சன் டி.வி, தினகரன், ஹிந்து செய்திகளில் தினமும் கலைஞருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு தனது இருப்பை நூதனமான் அதேசமயம் ஆழமாக வெளிப்படுத்தி வருகின்றார்.

இவர்கள் மூவரும் ஒருவர் மற்றொருவரை எப்படி ஏய்ப்பது, என்று எப்போதுமே தருணம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில் மாறன் குடும்பத்தினர் நடத்தும் தினகரன் பத்திரிகையில் மே 9- இதழில் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பு வெளியாகியிருந்தது. இந்தக் கருந்துக்கணிப்பில் முக.ஸ்டாலினுக்கு முதல் இடமும்; மற்றவர்கள் (தயாநிதி மாறன்) இரண்டாம் இடமும், முக.அழகிரிக்கு வெறும் 2% கடைசி இடமும் கிடைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

இதைப் பார்த்த மதுரை மாவட்டத்தின் அழகிரி தொண்டர் குண்டர்கள், அழகிரிக்குத் தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தி, தங்களது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்காலத்தில் பதவிகளை அடையவும் இதைப் பயன்படுத்த முடிவு செய்து கலாட்டாவில் இறங்கியுள்ளனர்.


பதவி ஆசையால் கண்கள் மறைக்கப்பட்ட இந்த பாசிச கும்பல் நடத்தும் வெறியாட்டங்கள் மிகவும் பயங்கரமானவை. 7 அரசுப் பேருந்துகளைக் கொளுத்தியும், பல கடைகளை அடித்து நொறுக்கியும் தீராத வெறி, கடைசியில் சன்.டி.வி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேரின் உயிரைப் பலி கொண்டு முடிந்திருக்கிறது.




இப்படி ஒரு குடும்பச்சண்டைக்காக , கருணாநிதிக்குப் பிறகு கட்சித் தலைமையையும், முதலமைச்சர் பதவியையும் யார் பிடிப்பது என்ற பதவித் தகராறில் மூன்று பேரைக் கொல்வது வரை இவர்கள் சென்றுள்ளனர்.

ஏழு ஆண்டுக்களுக்கு முன்பு இதே போன்றதொரு வெறியாட்டத்தை, ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளஸ்ன்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை கொடுத்த போது நடத்திய அதிமுகவினர், கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி தர்மபுரியில் ஒரு கல்லுரி பேருந்தை நிறுத்தி, மாணவிகள் அனைவரையும் உள்ளேயே பூட்டி நெருப்பு வைத்துக் கூண்டோடு கொல்ல முயற்ச்சித்தனர், இதில் மூன்று மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதும், அந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை கொடுக்கப் பட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே.





பதவி ஆதாயத்துக்காக பொதுமக்களை கொலை செய்வதில் எந்தவொரு ஓட்டுகட்சியும் மற்றவர்களுக்குச் சளைத்ததல்ல என்று மாறி மாறி நிரூபித்து வருகின்றனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள்து கட்சி கட்டுக்கோப்பானது என்று பிதற்றினார் கருணாநிதி. இன்றைக்கு நடந்துள்ள இந்த விஷயம் அந்த கட்டுகோப்பின் வெளிப்பாடா?

தி.மு.க வின் உட்கட்சி பூசலுக்கு இதுவரை கட்சிக்குள்ளேயே தீர்வு (த.கிருட்டிணன்) கண்டுவந்தனர். ஒட்டு போய்விடும் என்ற காரணத்துக்காக பொதுமக்கள் மீது கைவைக்க எப்போதும் சற்று தயங்கும் இவர்களுக்கு கடந்த உள்ளாட்சித் தேர்தல்தான் தைரியத்தைக் கொடுத்துள்ளது. ஒட்டுப் போட மக்கள் யாரும் முன்வராவிட்டாலும் கூட அராஜகத்தின் மூலம் கள்ள ஓட்டுப்போட்டும், ஓட்டுப் பெட்டிகளைக் கடத்தியும் ஜெயிக்க முடியும் என்பதை கடந்த இரண்டு முறை நடந்த உள்ளாட்சித் தேர்தல் நிரூபித்தது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் கொலையாளிகளை அதிமுக தொடர்ந்து ஆதரிப்பதும், அவர்கள் மீது கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பிறகும் அவர்களது குடும்பத்திற்கு பல லட்சம் நிதியுதவியும், மேல் முறையீட்டிற்கு மறைமுக ஆதரவையும் ஜெயலலிதா கொடுத்து வருகிறார். இதே நம்பிக்கை தான் இன்றைக்கு மதுரையில் வெறியாட்டம் போட்ட அழகிரியின் ஆட்களுக்கும் ஊக்க மாக இருக்கிறது.

திமுகவும் சரி, அதிமுகவும் சரி ஆட்சியிலிருக்கும் போதும், எதிர்க்கட்சிளாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகள் குறித்து எந்தவித கவலையுமின்றி இஷ்டம் போலச் சொத்து சேர்த்தும், தங்களை ஆதரிப்பவர்களைப் பதவியில் அமர்த்தி அவ்ர்களுக்கும் சுரண்ட வழி செய்தும் வருகின்றனர்.
-
கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கடைக்கண் பார்வை தங்கள் மேல் பட்டாலே தாங்கள் கோடீஸ்வரர்களாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஒவ்வொரு உறுப்பினரிடமும் உள்ளது.

கட்சித் தலைவர்கள் எல்லோரும் தங்களுக்கெனத் தனி கும்பலை வளர்த்துக் கொண்டு வலம் வருகின்றனர். இன்றைக்கு ஒட்டுக்கட்சி அரசியலில் ஈடுபடும் ஒவ்வொரு தொண்டனுக்கும் எதிர்காலத்தில் மக்களைக் கொள்ளையிட்டுப் பெரும் பணம் சேர்க்கும் ஆசை உள்ளது.

இதையெல்லாம் வைத்து , சரியான நேரத்தில் தங்களது தலைவரின் பார்வை தங்கள் மீது படவேண்டும் என்பதற்காக போஸ்டர்கள், பேனர்கள் கட் அவுட்கள் , விழாககள் எனத் திட்டமிட்டு காய் நகர்த்தும் இவர்கள் , இது போன்ற தொரு பொன்னான வாய்ப்பை மற்றவர் எவரும் பயன்படுத்தும் முன்பு தான் முன்னின்று பெயர் வாங்க வேண்டும் என்று முந்திக் கொண்டு செயல்படுகின்றனர்.
தங்களது பதவி ஆசைக்காகவும், தங்களது தலைவர்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும் எந்த அராஜகத்திலும் ஈடுபட அவர்கள் தயங்குவதில்லை.

திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகளெல்லாம் யோக்கியமா என்றால் அதுதான் இல்லை. 2012 ஆட்சியை பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் பாமக முதல் நேற்றைக்கு ஆரம்பிக்கபட்ட விஜயகாந்த் கட்சி வரை பாரபட்சமின்றி எல்லா கட்சிக்கும், எல்லா உறுப்பினருக்கும் குறுகிய காலத்தில் மக்களைக் கொள்ளையடித்துப் பெரும் பணக்காரன் ஆகும் கனவு உள்ளது. இதனை இல்லை என மறுக்கும் தைரியம் எந்த கட்சிக்கும் இல்லை.

விஜயகாந்த் கட்சியில் கூட சமீபத்தில் நடந்த கோஷ்டி மோதலில் ஒருவர் வெட்டப்பட்டு மருத்துவமனையில், இப்படி ஓட்டுமொத்தமாகப் புரையோடிப்போய் மக்களை சுரண்டி கொழுக்கும் எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரும் நிலையில் இன்றைய ஜனநாயகம் உள்ளது.

ஓட்டுப்பொறுக்கி ஆட்சியமைக்கும் எல்லா கட்சிக்களும் பாரபட்சமின்றி இதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து மக்கள் முன்பு அம்பலப்பட்டு, அம்மணமாக நிற்கின்றனர். இனி இவர்கள் வந்து நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருப்பது வீண்.

இனி மக்களுக்கான ஜனநாயகத்தை புரட்சிகர இயக்கங்கள் மூலம் தான் உருவாக்கமுடியும். மக்கள் அனைவரும் பங்குபெறும் ஒரு அரசை ஏற்படுத்தவும் முடியும். அத்தகைய அரசில் தான் "அதிகாரம் அனைத்தும் நமது உழைக்கும் மக்களின் கைகளில்" இருக்கும்.
Related :

Labels: ,

Saturday, May 05, 2007

கார்ல் மார்க்ஸ்


"....நாம் ஒரு புதியகொள்கையுடன், இதுதான் உண்மை, இதற்கு முன்னால் மண்டியிடுங்க்ள் என்று வறட்டுக் கோட்பாட்டுத் தனமான முறையில் உலகத்தை நோக்கிச் செல்லவில்லை. உலகத்தின் சொந்தக் கோட்பாடுகளிலிருந்தே உலகத்தின் புதிய கொள்கைகளை உருவாக்குகிறோம்."

Related

வாழ்க்கைக்குறிப்பு

மார்க்ஸ் தன்னை பற்றி

சோசலிசம் பற்றி

இயங்கியல்


Labels:

Thursday, May 03, 2007

குஜராத் படுகொலை பற்றிய டாக்குமென்ட்ரி -- ராகேஷ் சர்மா

"என்ன இருந்தாலும் தோழரே...... "


பொதுவாக இந்த சமுதாயம் மாற வேண்டும், புரட்சி வரவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. புரட்சி என்பதை பொதுச் சொல்லாக உச்சரிப்பது இன்பமாகவும் இருக்கிறது. அதனை ஒரு வினைச் சொல்லாக்கும் வேலைகளில் ஈடுபடுவதோ கஷ்டமாகப்படுகிறது.

புரட்சி என்பது உலகை மாற்றுவது மட்டுமல்ல. சமுதாய நலனுக்காக முதலில் நம்மை மாற்றிக் கொள்வது . எதிரி வர்க்கத்தின் மேல் விமரிசித்துக் கை வைக்கும் வீரம் எளிதாக வந்து விடுகிறது. நம்மீது கைவைத்துப் பார்க்கும் தைரியம் மட்டும் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை,

புரட்சியின் மீது ஆர்வம் , அதே நேரத்தில் அதற்கான வேலை செய்வதில் தயக்கம். இதன் வகை மாதிரியாய் இருக்கும் இளைஞர் ஒருவரைச் சமீபத்தில் சந்தித்துப் பேசினேன்.

**************************************************************************************


*என்ன ஆரோக்கியசாமி நல்லாயிருக்கீங்களா?

*அட ! வாங்க தோழர். உங்கள் வந்து பார்க்க முடியல, நீங்களே வந்துட்டீங்க.



*ரொம்ப வேலையா? போன வாரம் ஆர்ப்பாட்டப் பிரசுரங்கள் கூட அனுப்பியிருந்தேன் வரக்காணுமே....

*(சிறிது நேரம் தயக்கத்துடன்) உங்க கிட்ட பொய் சொல்றதுக்கில்லை தோழர் ! முழுமையா செயல்படணும். சும்மா பத்திரிகை மட்டும் வாங்கிப் படிச்சிட்டு , எதிலவும் ஈடுபடாம இருக்கிறதனால, உங்க பொகத்துல முழிக்கவே கஷ்டமா இருக்கு தோழர்.



*என்னங்க வட்டிக்காரன் கிட்ட பேசுற மாதிரி பேசுறீங்க. இதுல தனிப்பட்ட கவுரவப் பிரச்சினை ஒன்னுங் கெடயாது. மக்களுடைய நலனுக்காக உழைக்கனும்னு பொறுப்புணர்வுதான் முக்கியம். அப்புறம் என்ன, அமைப்பு வேலைய சேர்ந்து செய்யுங்க. (என் கையிலுள்ள தமிழ் மக்கள் இசைவிழா பிரசுரத்தைப் பார்த்தவுடன் ஆவல் பொங்கி உற்சாகத்துடன் பேச்சை வேறு கோணத்துக்குத் திருப்பினார்)

*என்ன தோழர் இசைவிழா பிரசுரம் வந்துடிச்சா, முன்கூட்டியே டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுறேன் தோழர் (என் முகத்தை உற்றுப் பார்த்தவர் என்னிடமிருந்து பதில் வரவில்லை என்றாலும் மேற்கொண்டு தனது ஆவலை வெளிப்படுத்தினார்.) தோழர், போனமுறை ஒயிலாட்டம், படுகர் ஆட்டம் , தேவராட்டம் நல்லயிருந்திச்சு. இந்த முறை வேற ஏதாவது புது ஆட்டம் இருக்குமா தோழர்.

*ஊம் , இந்த முறை புது ஆட்டம் என்னங்கிறதை பெறகு பாப்போம். உங்க கிட்ட ஊசலாட்டம்னு ஒண்ணு இருக்கே அதபத்தி இப்ப பேசுவோமே.

*சிரிச்சா தப்பா எடுத்துக்காதீங்க தோழர். நாந்தான் ஏற்கனவே சொன்ன மாதிரி. நான்ல்லாம் சும்மா வேஸ்ட். உங்கள மாதிரி .....முடியலையே.



*எங்கள் மாதிரி , உங்களை மாதிரின்னு இந்த தெய்வமாக்குற வேலையெல்லாம் விடுங்க. நாம ஒண்ணும் குறி சொல்ற ஆளுங்க கெடையாது. ஒக்காந்த எடத்துலேயே ஜீபூம்பான்னு ஊதிவுடுறதுக்கு, நம்ம குறிக்கோள் அடையனும்னா ஜனங்க மத்தியிலே போகனும். அவங்க பிரச்சினைகள முதல்ல நாம தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் செய்யிறதுக்குதாங்க மார்க்சியம், சும்மா டி.என்.பி.எஸ்.ஸி. கைடு மாதிரி வீட்ல உக்காந்து மார்க்சிய புத்தகத்த படிச்சா புரட்சி நடக்குமா சொல்லுங்க .

*ஆமா தோழர், பக்கத்து ஊர்ல , இப்ப கூட சாராய சாவு நடந்திச்சி, யாராவது தோழர்கள் வந்திருந்தா நாம போயி தகவல் திரட்டியிருக்கலாம்.


*அது சரிங்க. உடனே நீங்க போயி பார்த்து தகவல் விசாரிக்கிறதுல என்ன பிரச்சினை?

*அந்த ஊர்ள எல்லாம் தெரிஞ்ச மொகம் தோழர். எங்க அப்பா அந்த ஊர்லதான் டீச்சரு. உங்க பையன் இந்த கட்சியில் எல்லாம் இருக்கான்னு சொல்லுவாங்க. உடனே எங்க அம்மா வீட்ல பிரச்சினை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. மெயின 'போலீஸ்காரன்' இழுத்துப்ப்போட்டு அடுப்பாண்டா உனக்கு ஏண்டா அந்த தலையெழுத்து'ன்னு சத்தம் போடுவாங்க. பெரிய தொல்லைங்க.


*அவங்க கண்ணோட்டத்துக்கு அப்படித்தான் பேசுவாங்க . நீங்க எந்த வர்க்கத்திற்காக வாழ விரும்புறீங்களோ அதுக்காக இறங்கி வந்து உங்க கருத்தைப் பேசுங்க. ஏசுவ சிலுவையில் அறைஞ்சா மட்டும் தியாகம் , போலீஸ்காரன் நம்மளச் செவுள்ல அறைஞ்சா மட்டும் கேவலமா? மக்களுக்காக அந்த வன்முறையையும் எதிர்கொள்றோம்னு உங்க கருத்த நீங்க பேச ஏன் தயங்குறீங்க ?

*இல்ல தோழர், அம்மா , அப்பா கிட்ட பிரச்சினை பண்ணிகிட்டு மீறி நான் இயங்குறதில்ல. அது எங்கிட்ட உள்ள குறைபாடுதான்.

*அப்ப அரசாங்கம் வழியா ஒடுக்குமுறை வந்தா எதிர்ப்பீங்க, அதுவே அம்மா அப்பா வழியே வந்தா சகிச்சிக்கலாமா? எங்க சுத்தி வந்தாலும் அதாங்க. புரட்சின்னா மொதல்ல நம்மள மாத்திக்க போராடணும். அதுக்கு ஏன் தயக்கம் காட்டுறீங்க?

*அதாவது தோழர், அப்பா அம்மா 'கெவர்கெண்ட் ஸ்டாப்' நான் ஒரே பையன். ஏதாவது வாதம் பண்ணி வெளிய வந்திட்டா கஷ்டமாயிருக்கும்.

*யாருக்கு கஷ்டமாயிருக்கும்? ஒரு பேச்சுக்கு வெச்சிக்குவோம்; ஒருவேளை நீங்க வீட்ட விட்டு வெளிய போயிட்ட, அய்யோ புள்ள இருந்திருந்தா இந்நேரம் ரேசன் வாங்கிக்கிட்டு வந்து வச்சிருப்பான் . புள்ள இருந்திருந்தா, இந்நேரம் மளிகை சாமான் வாங்கியாந்து போட்டிருப்பான். அப்படின்னு நினைக்கிற அளவுக்கு உங்க வீட்ல நீங்க எந்த வேலையிலெயும் பங்கெடுக்குறதில்ல. ஒரே புள்ள இப்படி கட்சி வேலைன்னு வெளியே போயிட்டானேன்னு கவலைப்படுவாங்களே தவிர மத்தபடி உங்க வீட்லேயே உங்களுக்கு சொல்ற உபதேசம் என்ன? முடிஞ்சா வேலைக்குப் போ இல்ல பேசாம சிங்கப்பூர், மலேசியான்னு ஏற்பாடு பண்றோம்தானே அவுங்களும் சொல்றாங்க.

*ஆமாந் தோழர் , நம்ம "அமெரிக்க போகம்" புத்தகத்த படிச்சிட்டு "விஷயம் சரிதான் நாமெல்லாம் அதுக்காக ஏதாவது 'டொனேஷன்' தர்றதோட நிறுத்திக்கணும். அசதி இல்லாதவன் போராடட்டும் . யார் தப்புன்னு சொல்றா"ன்னு பச்சையா சொல்றாங்க.

நீ வீட்டவிட்டு மொதல்ல வெளில போனாதான் உருப்படுவ , மொதல்ல அதுக்கு ஏற்பாடு பண்றேன்ன்னு பணம் கொடுத்து வேல வாங்கற ஐடியாகூட இருக்கு.

*வீட்ட விட்டு வெளில போய்ட்டா அவங்களுக்கு அவங்களுக்குக் கஷ்டமாயிருக்குமுன்னு நீங்க நெனக்கிறீங்க. உண்மை என்னான்னா? எல்லா அப்பா அம்மாக்களுடைய பிரகடனமே 'வீட்டை விட்டு வெளியே போ' அப்படீங்கறதுதான். நாமளும் அதான் சொல்றோம். ஆனா அவுங்க வெளியே போயி சுயநலத்துக்கான ஜோலியப் பாருங்குறாங்க. நாம மக்களுடைய நலனுக்கான வேலையைப் பாருங்குறோம்.

*அவங்களுக்கு விஷயம் நல்லாத் தெரியிது தோழர். ஆன எவ்வளவு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்குறாங்க.

*விஷயம் தெரிஞ்சதனாலதாங்க அவுங்க ஏத்துக்க மாட்டேங்குறாங்க. நீங்கதான் முடிவு பண்ணனும் வர்ககப் பாசமா? தாய்ப்பாசமா ?

*இல்ல தோழர். எனக்கு சின்ன புள்ளையிலேர்ந்தே பாசம் ஜாஸ்தி அதான் நான் தடுமாறிக்கிட்ட இருக்கிறது. என்ன இருந்தாலும் அப்பா அம்மா மீறி செய்யிறதுக்குக் கஷ்டமா இருக்குது தோழர்.

*நீங்க சொல்ற காரணத்த வெச்சி பார்த்தாக்கூட வீட்டவிட்டு வீதிக்கு வந்து போராடியாகணும். உங்க அம்மா அப்பா இவ்வளவு செலவு பண்ணி உங்கள ஆசிரியர் தகுதிக்குப் படிக்க வெச்சிருக்காங்க. ஆனா அரசாங்கம் இனிம ஆளே எடுக்கப் போறதில்லேன்னு அறிவிச்சிடுச்சி. உங்க அம்மா , அப்பா எதிர்பார்ப்ப, குடும்பப் பாசத்த கொலைச்சது யாரு? புரட்சிகர அமைப்புகளா ? ஜெயலலிதாவா(அன்று) ?

கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் சொல்லட்டுங்களா? உண்மை என்னான்னா, இப்படியே காலைல மெதுவா தூங்கி எழுந்திருச்சா அம்மா கைல காப்பி தருவாங்க ஒரு ரவுண்ட் வெளியே போயுட்டு வந்தா டிபனு. மத்தியான்ம் ஒரு நல்ல தூக்கம் அப்படியே சயங்காலம் யாராவது தோழர்களப் பார்த்தா மார்க்சியம், விவாதம், அப்படியே நைட்ல டி.வி. உலகச் செய்திகல், புதிய கலாச்சாரம். இப்படியே இப்ப இருக்கிற வர்க்க நலன் குறையாம கம்யூனிசம் பேசிக் கிட்டு இருக்குறதுதான் உங்களுக்குப் பிடிக்குது.


இந்தக் சுகங்களை உதறிவிட்டு வர உங்களால முடியல அப்படீங்குறதுதான் உண்மையான பிரச்சினை . இந்த வீடு , அம்மா, அப்பா....இதெல்லாம் இது மேல பூசப்பட்ட வண்ணக் கலவையாத்தான் படுது.

இல்ல வேற என்னதான் பிரச்சினைன்னு நீங்கதான் சொல்லுங்க விவாதிப்போம்.


(அந்தத் தோழர் நீண்ட நேரம் மெளனமானார்.)


புதிய கலாச்சாரம் ஜனவரி 2002 -ல் இருந்து.

Wednesday, May 02, 2007

"மே 1" ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டம் பற்றிய தொலைக்காட்சி செய்தி

"மே 1" ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்

மே 1 காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயேம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


அது குறித்த பத்திரிக்கை செய்திகள் :


தமிழ் முரசு




தினமலர்




தினமணி



மேலும் இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் பொது செயலாளர் தோழர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.

Related Posts:

Labels: , ,

Tuesday, May 01, 2007

மேதின வாழ்த்துக்கள் !

மே 1 ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டத்தில் ஜனநாயக சக்திகள் எல்லாம் கலந்து கொண்டு ரிலையன்ஸ் எதிர்ப்பை உரக்க ஒலிப்போம்!

Labels: