Tuesday, March 20, 2007

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் ?

கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் - தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் ரிலையன்சை விரட்டியடிப்போம்


மக்களுக்கெதிரான கொள்கை மூலம் :

உழைப்பில் ஈடுபடும் மக்களுக்கு சேவைத் துறையாக அளிக்கப்பட வேண்டிய கல்வியும் (அறிவை மேம்படுத்தவும், அறிவியல் தொழில் நுட்பத்தை கற்று தரவும்), மருத்துவமும் ( உழைப்பின் போது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு மருத்துவம் அளித்து மீண்டும் உற்பத்தில் ஈடுபடுத்த ) இன்று பணமுதலைகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க கூடிய தொழிலாக மாறி விட்டது. இது தனியார்மயம்.

நம் நாட்டுக்குத் தேவையான உணவு பொருட்கள் எவ்வளவு என்ற திட்டமிட்ட விவசாய உற்பத்தி, தேவை பொறுத்து இறக்குமதி என்பதை அழித்து தனியார் லாபத்தை அடிப்படையாக கொண்ட விவசாய உற்பத்தி,எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்று மாறிவிட்டது. இது தாராளமயம்.

நம் நாட்டுக்கு உள்ளேயே இன்னொரு தனி நாடாக சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை பறித்து; இந்தியனும் & இந்திய சட்டங்களும் நுழைய முடியாத பகுதிகளை உருவாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பது, லட்சக்கனக்கான சிறு வியாபாரிகளுக்கும், சிறு காய்கறிக் கடைக்காரர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கும் சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற கம்பெனிகளை நுழையவிட்டு ஒட்டு மொத்த சில்லறை வணிகத்தையும் அழித்து ஒருசிலர் லாபம் அடையக்கூடியதாக மாற்றுகின்றனர். இது உலகமயம்.

கோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் -தொழிலாளர்களின் சூறையாட வரும் கொலைக்கருவியும் இதுதான்.


ஊர்வலம், உண்ணாவிரதத்துக்கு அடங்கமாட்டான் ரிலையன்ஸ் கம்பெனி. சட்டம், போலிஸ் , கோர்ட் எல்லாம் அவனுக்குக் காவலாளி !
இந்த வழிமுறைகளை நம்புவதற்கு என்ன அடிப்படை இருக்கிறது ?

களத்திலிறங்கி அவன் கடையை முற்றுகையிடுவதை தவிர வேற வழியில்லை.

சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை ஆதரிப்போம் !
ரிலையன்ஸ், டாடா, பிர்லா, வால்மார்ட்- போன்ற
பெருமுதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் புறக்கணிப்போம் !



தஞ்சை இசை விழாவில் தோழர் மருதையன் உரையிலிருந்து,

ரிலையன்சு போன்ற உள்நாட்டு களவாணிகளுக்கும் ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சில்லறை வணிகத்தின் கதவை திறந்துவிட்டிருக்கிறது அரசு. ரிலையன்சு கடையில் 'சீப்'பாகக் கிடைக்கிறதாம். முலாயம் சிங் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இலவசமாக கொடுத்தால் ஏன் அவன் 'சீப்'பாக கொடுக்கமாட்டான். என்ன ஒரு பத்து ரூபாய் குறைத்து கொடுத்து விடுவானா? நீங்கள் யோசிக்கவேண்டும்.

உங்கள் தெருமுனையில் உள்ள அண்ணாச்சிக் கடையில் கவனித்திருப்பீர்கள். அந்த கடையில் ஒரு குடும்பமே உழைத்துக்கொண்டிருக்கும். காலை நான்கு மணிக்கு சந்தைக்கு சரக்கெடுக்க செல்வதில் ஆரம்பிக்கிறது அவனது நாள். பகல் முழுதும் உழைத்துக் களைத்து அவர்கள் உறங்கச் செல்லும் போது இரவு பன்னிரெண்டாகிறது. இவ்வளவு உழைக்கிற அந்தக் குடும்பம் கோடிகோடியாக சேர்த்து விட்டதா என்ன?? யோசியுங்கள்.. அந்த அண்ணாசிக் கடையில் எத்தனை நாள் கடன் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை 'புளி சரியில்லை' என்று சண்டை போட்டிருப்பீர்கள்? எத்தனை விசேஷங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பீர்கள்?? இன்று விலை மலிவாக கிடைக்கிறதென்று கோடிகளைச் சேர்த்துவைத்திருக்கிற அந்த கொள்ளையர்களுக்கு இன்னும் கொஞ்சம் கொட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? விலை அதிகமானாலும் எளியவனான நம்மவனையே ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு எழ வேண்டாமா?


Related Articles:

கோடீசுவரக் கொள்ளையன் ரிலையன்ஸ் அம்பானியை விடாதே, விரட்டியடி!!!

அழிவை நோக்கித் தள்ளப்படும் சில்லறை வியாபாரம்

மறுபடியும் காலனியாகுது தேசம்! மறுமலர்ச்சியடையுதாம் விவசாயம்.

இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்

தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - உலகமயம்!!

கோக்கை அடி கொண்டாடு..!!

தனியார்மயம் தாராளமயம் உலகமயமும் - மறுகாலனியாதிக்கமும்


Thursday, March 15, 2007

நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
சொல்லிடு உன்னால் முடியுமா !

நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !

இல்லை கண்டும் காணாத கல்லினமா!
கண்டும் காணாத கல்லினமா!

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கண்ணில் விழுந்ததும் தூசியல்ல !
என் கண்ணிரும் ஒயவில்லை
நெஞ்சை அறுக்கும் சோகமடா !
அந்த பிஞ்சு முகம் கண்ணில் ஆடுதடா !
தொழுகை முடிந்த வாசலிலே
அந்த அழுகை யாருக்கும் கேக்கலியே !

கேட்டது கொலை வெறி சத்தமடா
அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !
கேட்டது கொலை வெறி சத்தமடா

அது வேட்டைக்கு அலைந்த கூட்டமடா !

குழந்தை மறைந்தது கூட்டத்திலே
பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே
குழந்தை மறைந்தது கூட்டத்திலே

பிஞசு குரலும் மறைந்தது கூச்சலிலே

சின்ன பிஞ்சை பிளக்க மனம் வருமா?
அது முஸ்லீம் என்றால் சம்மதமா
நீ இந்துவென்றால் சொல் சம்மதமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

கங்கை சுமந்து மீன்களையா
தலை துண்டாய் போன உடல்களையா !
மண்ணில் விளைந்த கோதுமையே
நீ தின்று வளர்ந்தது பிணங்களையா !

கண்கள் அவிந்த பகல்பூரே
உன் பங்கினை கேள் இந்த பாவத்திலே !
தோட்டத்தின் மேலே பூக்களடா !

தோண்ட தோண்ட தலைகளடா !
கோதுமை கதிர்கள் பொன்நிறமா !
தூர்களின் வேரோ செந்நிறமா !

ஜென்மமடா ராம ஜென்மமடா !
இரத்த கங்கையில் பிறந்த ஜென்மமடா
மனித கறி நர மாமிசமா
உடல் முஸ்லிம் என்றால் சம்மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

ஒடிவந்தனரே உயிர் பிழைக்க !
இடம் தேடி வந்தனரே உடல் நடு நடுங்க !
துர‌த்தி வந்தது கும்பல் ஒன்று
ஊரில் இருக்க வைத்தது அடைக்கலமென்று !

தேடிய கும்பல் நுழைந்ததடா
மூடிய கதவு திறந்ததடா !
அடைக்கலம் தந்த கைகள் அல்ல
அது ஆட்காட்டிகளின் கைகளடா !

துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா
துரோகமடா கொடுந் துரோகமடா
தூக்கத்தில் கொன்ற துரோகமடா

கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா
கொடுத்த சோறு செரிக்கும் முன்னே
குடலை அறுத்த துரோகமடா

துரோகிகள் மதம்தான் உன் மதமா ?

நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?


சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?

சொல்லிடு உன்னால் முடியுமா
நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ?


இல்லை கண்டும் காணாத கல்லினமா?

சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?
சம்மதமா சம்மதமா
நீ இந்து என்றால் சொல் சம்மதமா ?



என்று உலுக்குகிறது கோவனின் குரல்.. ஈரபசையுடைய ஒவ்வொருவர் இதயத்திலும் இந்த பாடல் ஒலித்து கொண்டேயிருக்கும்.

------------------
மக்கள் கலை இலக்கிய கழகத்தின்
பாடல் வெளியிடான
" காவி இருள்" யில் இருந்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

Related Article:

சுயமரியாதையுள்ள(?) இந்துத்துவ வெறியர்களே - இந்த முறையாவது......

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!...

இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!

இவை எனது FAQ... பதில் சொல்லுங்க!

பார்ப்பனியம் என்னும் பண்பாட்டு மேலாதிக்கம்

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்



Sunday, March 04, 2007

தோழர் ஸ்டாலின்

பெயரெச்சம்


"பெயர்ல என்னங்க இருக்கு?"--என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால் என் பெயரைக் கேட்ட மாத்திரத்தில், ஏதோ அதற்குப் பின்னே பெரிய அபாயம் உள்ளது போல் சிலர் விசாரித்த போது பயமாகிப் போனது என்றார் நண்பர் ஒருவர். அப்படிப் பெயரில் என்ன தான் பிரச்சினை? மேற்கொண்டு அவரே நினைவு கூர்ந்தார்.

"அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டுருந்த நேரம் வகுப்பறையில் ஆசிரியர் வரிசையாக வருகைப் பதிவேட்டின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு வந்தார். மணி....ராசா...வெங்கடெஷ்....ஸ்டாலின். என் பெயரை உச்சரித்ததும் ஒரு நிமிடம் மெளனமானார்.

ஸ்..டா..லி..ன் என்று தலையாட்டிக் கொண்டு மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னார், தனது மூக்குக் கண்னாடியை கழற்றிப் பொறுமையாக மேசை மீது வைத்தார். "டேய் பயங்கரமான ஆளுப்பா. பக்கத்துல உள்ள பசங்க பாத்து நடந்துக்குங்கடா. இவரு ஸ்டாலின். ஏதாவது ஏடாகூடமா நட்ந்தீங்க தலைவரு போட்டுத் தள்ளிடுவாரு" என்று நடித்துக் காண்பிக்க, வகுப்பறையில் உள்ள மாணவர் எல்லாம் குபீரென்று ஒட்டு மொத்தமாக சிரித்து விட்டனர்.

"ச்சே...எல்லாரும் கிண்டல் பண்றாங்க என்ன பேரு இது? அப்பா ஏன் தான் இந்த பேரு வச்சாரோ?"--என்று பெயரின் மீது ஒரு வெறுப்பும் யார் என் பெயரை கேட்டாலும் சொல்வதற்கு கூடவே ஒரு பயமும் ஏற்பட்டது.

ஏதாவது ஒரு முரடனுடைய பெயராக இருக்குமோ? அப்பா அவ்வளவாகப் படிக்காததால் கேட்ட மாத்திரத்திலேயே பிறர் பயப்பட வேண்டும் என்று இப்படி ஒரு பெயர் வைத்திருப்பாரோ! பெயருக்குப் பின்னால் ஏதோ ஒரு புதிர் இருப்பது மாதிரி இப்படி ஒரு பெயரை ஏன் தான் வைத்தாரோ என்று கலக்கமானது.

மெல்லப் பள்ளிப் பருவம் கடந்து கல்லுரிக்குள் காலடி எடுத்து வைத்தேன். ஒரு நாள் வகுப்பில் ஆங்கிலப் பேராசிரியர் என் பக்கம் கவனத்தைச் செலுத்திப் பேச ஆரம்பித்தார்." என்ன ஸ்டாலின் ? உனக்கு....யார் பேரு வெச்சது ? "எங்க அப்பாதான் சார் ஏன்?" ஒருவித தயக்கத்துடன் ஆரம்பித்தேன். "இல்ல ஸ்டாலின்னு பேரு வெச்சிருக்கிறாரே ஓங்க அப்பா என்ன கம்யூனிஸ்டா?" "இல்ல சார்.....ரயில்வே கலாசி." "ஒருவேளை ஒனக்குத் தெரியலையோ என்னமோ?" "இல்ல சார் அவரு எந்த கட்சியும் கிடையாது ஏன் சார் கேக்குறீங்க?" "இல்லப்பா ஸ்டாலின் ங்குறது கம்யூனிஸ்ட் பேரு, இல்ல நீங்க கிறிஸ்டினா?" "இல்ல சார்." "ஒ.கே.ஸ்டாலின் சும்மாதான் கேட்டேன்" என்று முடித்துக் கொண்டார்.

பேராசிரியர் இயல்பாகப் பேசினாலும் என் பெயரைச் சுற்றிச் சுற்றி நடந்த விசாரணையால் குழப்பம் கூடிப் போனது, ஏதோ ஒரு மறைபொருளைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் அவர் பல துணைக் கேள்விகளுடன் என் பெயர் பற்றி விசாரித்தது, பெயருக்குப் பின்னால் என்னதான் இருக்கிறது என்பதை நாமே ஆராய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக ஏற்பட்டது, இன்னும் இதைமுடிடையாத பெயரெச்சமாக விட்டுவிடக் கூடாது எனத் தோண்றியது.

இவ்வளவு காலம் அவ்வப் போது வெளியில் நடந்ததை அப்பாவிடம் சொல்லும்போது அவரும் "போடா! சும்மா வெளயாட்டுக்குச் சொல்றாங்க" என்றுதான் சொல்லி வந்தார். இவ்வளவு பெரியவனாக வளர்ந்தபிறகும் அந்தப் பதில் போதுமானதாக இல்லை. பொறுமையாக அப்பா உட்கார்ந்திருக்கும் நேரம் பார்த்து புதிருக்கு விடை கேட்பது போல வினவினேன்.

"ஏம்பபா என்னதுக்கு எனக்கு ஸ்டாலின்னு பேரு வச்சீங்க?" 'ஆமாண்டா, இன்னும் கல்யாணம் பண்ணி ஒரு புள்ள பெத்த பின்ன கேட்காம இப்பவாவது கேட்டீயே. தம்பி, அரக்கோணத்துல எங்கூட வேலபாக்குறான் பாரு சாமிதுரை. அவனுக்கு புள்ள பொறந்தப்ப, பெரியார் அரக்கோணம் கூட்டத்துக்கு வந்தாரு. அந்தப்புள்ளக்கி அவுரு வச்ச பேரு ஸ்டாலின். ரஷ்யாவோட ஜனாதிபதி பேருப்பா. ரொம்ப ஒசத்தியான பேராச்சேன்னு உனக்கும் வச்சேன்...." அப்பா அந்த பெயருக்கு உரிய வரை பலவாறு சிறப்பித்துப் பேசிக் கொன்டே போனார். இப்போது மனதில் பெயர் பற்றிய புதிர் ஆர்வமாக மாறி என்னைத்துண்டியது.


இந்தச் சுழ்நிலையில் சென்னைக்கு வேலை தொடர்பாக சென்றபோது அண்ணாசாலையில் ஒரு நடைபாதை கடையில் ஸ்டாலின் என்ற தடித்த எழுத்தோடு ஒரு புத்தகம் என் கண்ணில்பட, மூடிக் கிடக்கும் கற்கோட்டையாய் அச்சிறுத்தும் மனதின் கேள்விகளுக்கு நடக்கும் வழியில் ஒரு திறவுகோல் கிடைத்த மாதிரி பெருமகிழ்ச்சியானது.

ரஷ்யாவில் ஒரு ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்து, பாதிரியாருக்குப் படிக்கப் போய் தன்நாட்டு ஏழை மக்கள் படும் துன்பத்தை மாற்றுவதற்காகப் படிப்பை விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து தொழிலாளர்களோடு இணைந்து போராடிச் சிறைப்பட்டு, தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்தி அந்த நாட்டுக்கு அதிபராகி இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய நாஜி வெறியர்களைத் தோல்வியடைச் செய்து உலகைக் காத்ததுடன் தனது நாட்டிலும் உழைப்பவர்க்கான ஆட்சியதிகாரத்தைப் பாதுகாக்க இறுதிவரை போராடியவர் ஸ்டாலின் என்று படிக்கப் படிக்க ஸ்டாலின் என்ற பெயர்ச்சொல் வினைச் சொல்லாய் விரிந்துகொண்டே போனது.


அதிகம் படிக்காதவர் என்று நினைத்த என் அப்பா எவ்வளவு ஒரு அருமையான பெயரை எனக்குத் தேர்தெடுத்திருக்கார் என நினைக்க வியப்பு மேலிட்டது. எனக்கு நானே முதன்முறையாக இந்தப் பெயரைப் பற்றிப் பெருமையாக மனம் மகிழ்ந்த போதும் கூடவே திரும்பவும் அச்சமானது, இது பெயரைப் பற்றித் தெரிந்து கொண்டதால் தோன்றிய புதிய அச்சம். இந்த உயர்ந்த பெயருக்கேற்றமாதிரி நாம் வாழவேண்டுமே என்ற அச்சம் !"
--சுடர்விழி

Related Articles:



Labels:

Friday, March 02, 2007

ம.க.இ.க கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சி

விடுதலைப் பாட்டு...

இது விடியல் பாட்டு !

"காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல..."
- காட்டுச் சுனையாக, புரட்சிக் கனலாகப் பொங்கிப் பரவுகிறது.
அந்தக் கலகக்காரன் குரல் !