Monday, July 16, 2007

காசு இருந்தா சொகுசு பஸ்.... காசு இல்லைன்னா போலீஸ் அடி !

இன்றைக்கு நாட்டை விற்கிறதை தீவிரமாக செய்துக்கிட்டு இருக்கிறார்கள். அதையே வளர்ச்சி , தவிர்க்க முடியாது (போலிகள் சாரி துரோகிகள்) என்கிற பேரில் நாடு முழுக்க முழுவேகத்தோடு இப்ப இந்த ஓட்டுக்கட்சிக்காரங்க அன்றாடம் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

அதுல ஒன்னுதான் பேருந்து விசயத்துல இன்றைய அரசாங்கம் செய்து உள்ளது. முன்பு வெள்ளை கலர், மஞ்சள் கலர் என்றும் பச்சை கலர் போர்டு என்றும் பேருந்து வீட்டார்கள். பின்பு M சர்வீஸ் என்றும் பேருந்து விட்டார்கள்.

இப்ப கலைஞர் அரசாங்கம் ,ஏற்கனவே இருந்த மூனு கலர் பேருந்துல பாதி வண்டி ஒட்ட ஒடசலா இயக்காம நின்னுக்கிறுந்தப்ப புதிசா வண்டிகளை வாங்கி ஆரங்சு கலர் போர்டு, நீலக்கலரு போர்டு, ஏர்பஸ் என விட்டு இருக்கிறார்கள்.

இப்படி குறைந்த கட்டணமே ஐந்து ரூபாய் என பேருந்து விட்டுட்டு, யாராவது இதை எதிர்த்து போராட்டம் , ஆர்ப்பாட்டம் என இறங்குனா அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து பயமுறுத்துகிறார்கள்.

இப்படி உள்ளுர் மாநகராட்சி பேருந்து வண்டில மட்டும் இல்லாமல், வெளியூர் பேருந்துலேயும் டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் என்கிற வண்டிதான் இப்ப எல்லா வழித்தடங்கலிலும் அதிகமாக போகிறது.

சரி நல்லது தானுங்க நாடு முன்னேறுது, தனியாருக்கு நிகராக அரசு சொகுசு பேருந்து விடுவது, காசு இருக்கிரவங்க எங்க கஸ்டப்படனும் என்று சிலர் யோசிக்கலாம்.

ஆனா நாட்ல ஆக பெரும்பான்மையான மக்களை வாழவழியற்றவர்களாக ஆக்கிட்டு, ஒரு சிறு கூட்டம் வசதி வாய்ப்பாக இருக்கிறதை காண்பித்து இதை செய்கிறார்கள். 2 ஆயிரம், 3 ஆயிரம் சம்பளத்துல சென்னையில வாழ்க்கையை நடத்துகின்ற தொழிலாளிகள்,படிச்சுட்டு வேலைக் கிடைக்காம வேலை தேடுறதே வேலையாக வைத்து உள்ள இளைஞர்கள் என பெரும்பான்மை மக்களை ஆக்கிட்டு இதை பண்ணுகிறார்கள்.

காசு இல்லாதவனுக்கு இங்கு எதுவும் சொந்தம் இல்லை. வாழ உரிமையும் இல்லை என்கிற உலகமயமாக்கலோட ஒரு பகுதிதான் இந்த வர்க்கத்துக்கு ஏற்ற மாதிரி பேருந்து விட்டது.இன்றைக்கு வெளை கலர் போர்டுல மக்கள் அதிகம் பயணம் செய்றதை பார்க்கிறோம். ஏன்னா அவர்ங்களால பத்து ரூபாய் கட்டணம் கொடுக்க முடியாததுதான்.

இப்படி பெரும்பான்மை மக்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் உழன்று கொண்டு இருக்குமாறு வாழ்க்கையை ஆக்கிட்டு, இங்க ஒரு சிறு கூட்டமான ஐ.டி, மற்ற மோசடி,பிழைப்புவாத கும்பல் சொகுசாக வாழ்க்கை வாழ இன்று ஏர் பஸ் விட்டு இருக்கிறார்கள்.

வெள்ளை கலர் போர்டு பேருந்துல மக்களை அனுப்பிட்டு, பின்னாடியே போலீசுக்காரங்களை அனுப்பி அடிக்கிறார்கள்.
..
ஆனால் அதிகமான மக்கள் வெள்ளை கலர்போர்டு பேருந்துல போறதுக்கும், படிக்கட்டில் பயணம் செய்யிறதுக்கும் யார் காரணம் ? மக்களா என்றால் இல்லை, இவர்களை இந்த நிலைக்கு தள்ளிய அரசு தான் காரணமாக இருக்கிறது.

இந்த உண்மைகளை எந்த பத்திரிக்கையும் எழுதுறது இல்ல. இவங்களோட செய்தி என்னான்னா "படிக்கட்டுல பயணம் செய்கின்றவர்களை போலீஸ்காரங்க அடிக்கிறாங்க" என்பது தான்.

ஆனால் உண்மையை பரிசீலித்தால்தான் தெரிஞ்சுக்க முடியும், இந்த " மக்கள் விரோத அரசின் யோக்கியதையும்", "நாலாவது தூணோட யோக்கியதையும்".

Labels: , , ,

5 Comments:

Blogger  said...

எனக்கு தெரிந்து சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் எத்தனையோ நண்பர்கள் சில இடங்களுங்கு பேருந்தில் செல்வதை தவிர்த்துவிட்டு நடந்து செல்வதையே வாடிக்கையாக்கி கொண்டுவிட்டார்கள், வாழ்க்கையையே சொற்பத்தில் கொண்டிருக்கும் போது சொகுசு பேருந்து என்ன மசுத்துக்கு என்று அவர்கள் கேட்கிறார்கள், ஆனால் நமது அரசாங்கமோ நடுத்தரவர்க்கத்தின் மணிபர்சை குறிவைத்தே அத்தனை திட்டங்களையும் அமல்படுத்திக்கொண்டிருகிறது. தாலியறுக்கும் திருடன் போல உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை கூட பிடுங்கிகொள்கிறது இந்த கேடுகெட்ட அரசாங்கம், உழைக்கும் மக்கள் உடைமை வைத்துக்கொள்ள மட்டுமல்ல உயிரை வைத்துக்கொள்ள கூட உரிமை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் இடையில் எப்படியாவது வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கும் மக்களுக்கு ஒவ்வொரு முறையும் அறைந்து சொல்கிறது அரசாங்கம் “புரட்சி செய்” என்று.

அவசியமான பதிவு தோழர் பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்!!

தோழமையுடன்
ஸ்டாலின்

2:53 PM  
Blogger வவ்வால் said...

அரசாங்கம் பஸ் விடுறது , ரேஷன் கடை நடத்துறது , மின்சாரம் தயாரிக்கிறது போன்ற தொழில் எல்லாம் செய்யக்கூடாது , அதுவா கெவர்மெண்டுக்கு வேலை... வரி போடுற வேலைய மட்டும் பார்த்தா போதும்னு வலைப்பதிவுகளில் பொருளாதார புரட்சி செய்றவங எல்லாம் இருக்கும் போது ஏன் இன்னும் அதிகமா பஸ் விடலைனு அப்பாவியா கெட்கறிங்களே!

இப்போ கூட பஸ் எல்லாம் மக்களுக்காக தான் விடுறங்கனு நினைச்சா உங்களை என்ன சொல்றது , போக்குவரத்து துறைனு ஒண்ணு இருந்தா தானே வருஷா வருஷம் புது பஸ் வாங்க டென்டெர் விட்டு கட்டிங் வாங்களாம், பஸ் பாடிக்கட்ட அரசு பணிமனை இருந்தாலும் கரூர் ல தனியார்கிட்டே விட்டு காசு பார்க்கலாம். கூடவே தொழிலாளர்களை வைத்து தொழிற்சங்கம் நடத்தி அரசியல் செய்யலாம் அவங்க ஓட்டு எல்லம் வாரிக்கலாம்னு கணக்குல தான்!

சொகுசு பேருந்துல கட்டணம் கூட இருக்கேனு போய் அமிச்சர் பெருமக்கள் கிட்டே சொன்னா , ஒரு படம் பார்க்க 100 ரூப டிக்கெட்டுனாலும் வாங்குற மக்கள் 10 ரூபா கொடுத்து போன கொறைஞ்சுட மாட்டாங்க தான் சொல்வார் , எல்லாம் நாம செஞ்ச வேலை தான்! பன்னி மேச்சவன் , கட்சி தலைவருக்கு கார் ஓட்டினவன் எல்லாம் எம்.எல்.ஏ ஆக்கி அமைச்சராகவும் ஆக்குனோம்ல அனுபவிக்க வேணாமா!

3:39 PM  
Blogger அசுரன் said...

இது ஒரு வட்டி லேவாதேவி, ஒட்டுண்ணி அரசு நாம் சொல்லும் போது சும்மா சொல்லவில்லை.

வெறுமே உழைக்கும் மக்களிடமிருந்து சேவை வரியிலிருந்து மறைமுக நேரடி பல்முனை வரி விதிப்பின் மூலம் சுரண்டுவது முதல் பல்வேறு வகைகளில் சுரண்டி விட்டு அந்த பணத்தில் ஆதிகார வர்க்கத்திற்க்கும், பிற மேல் தட்டு மக்களுக்கு சேவைகளை வாரி வழங்குகீறது. இவற்றை இலவசம் என்று சொல்வதில்லை.

ஆனால் உழைக்கும் மக்களுக்காக செரிக்காத குசுவொன்றை விட்டால் கூட அதனை இலவசம் இலவசம் என்று விளம்பரப்படுத்தி அவமானப்படுத்தும்,

கட்டாயம் தேவையான பதிவு. வாழ்த்துக்கள்.
அசுரன்

5:02 PM  
Blogger அசுரன் said...

இது ஒரு வட்டி லேவாதேவி, ஒட்டுண்ணி அரசு நாம் சொல்லும் போது சும்மா சொல்லவில்லை.

வெறுமே உழைக்கும் மக்களிடமிருந்து சேவை வரியிலிருந்து மறைமுக நேரடி பல்முனை வரி விதிப்பின் மூலம் சுரண்டுவது முதல் பல்வேறு வகைகளில் சுரண்டி விட்டு அந்த பணத்தில் ஆதிகார வர்க்கத்திற்க்கும், பிற மேல் தட்டு மக்களுக்கு சேவைகளை வாரி வழங்குகீறது. இவற்றை இலவசம் என்று சொல்வதில்லை.

ஆனால் உழைக்கும் மக்களுக்காக செரிக்காத குசுவொன்றை விட்டால் கூட அதனை இலவசம் இலவசம் என்று விளம்பரப்படுத்தி அவமானப்படுத்தும்,

கட்டாயம் தேவையான பதிவு. வாழ்த்துக்கள்.

அசுரன்

5:02 PM  
Blogger Unknown said...

அடிப்படைத் தேவைகள் என்ன என்பதில் அரசாங்கத்திற்கு சொரணை இல்லை.

மக்களும் காசுக்கு ஓட்டுப்போட்டால் போதும் என்ற அளவிற்கு வந்து விட்டார்கள்.

எல்லா நிறுத்தங்களிலும் நிற்கும் பஸ் என்றும் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் பஸ் என்றும் விட்டால் அதில் அர்த்தம் இருக்கிறது.

அனைவரும் கொடுக்கும் வரிப்பணத்தில் இருந்து எளியவனுக்கு எட்டாத சேவையை அளிப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?

சிறப்பான பஸ்கள், நல்ல சாலைகள் , நன்றாக பராமரிக்கப்பட்ட நிறுத்தங்கள் ...என்று இருந்தால் அனைவரையும் பேருந்தில் செல்ல ஊக்குவிக்கலாம்...போக்குவரத்து நெருக்கடியாவது குறையும். இப்படி வர்க்கம் பிரிப்பதில் பாதிக்கப்பட்டவன் மேலும் பாதிக்கப்படுவான். :-(((

10:08 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home