Saturday, July 21, 2007

"விஷச்சக்கரம்"

'எனக்கு எப்போது அப்பா சட்டை தைத்துத் தருவீர்கள்'
'கையில் காசு வரட்டும் மகனே'
'எப்போது அப்பா கையில் காசு வரும்?'
'ஆலை திறக்கட்டும் மகனே'
'ஆலை ஏன் அப்பா மூடிக்கிடக்கிறது?'
'ஆலையில் ஏராளமான துணி உற்பத்தியாகி முடங்கிக் கிடக்கிறது, யாரும் வாங்குவாரில்லை மகனே, எல்லாம் விற்றுப் போனதும் மீண்டும் துவங்குவார்கள்'
'நாம் கொஞ்சம் வாங்கினால் என்னப்பா?'
'அதான் கையிலே காசில்லை என்று சொன்னேனே மகனே'
-'சமுதாயமய'மான உற்பத்தியில் சுவிகரிப்பில் மட்டும் 'தனியுடைமை' நீடிப்பதால் ஏற்படும் 'விஷச்சுழல்' இது.

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home