Monday, July 30, 2007

ஏகாதிபத்திய அடிமைகளே ! பொய்யுரை பதிவர்களே !!

நாட்டில் தொழிலாளர்கள், விவசாயிகள் என எல்லோரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், வாழவழியற்று தற்கொலை பண்ணிக்கிறாங்க என்ற இன்றைய நிலையினை அறிய பெரிய விஷய ஞானமோ, அறிவோ தேவையா என்றால் இல்லை,தினசரி நாளிதழ்களை பார்த்தா கூட தெரிஞ்சுக்க முடியும்.
..
செய்தி என்கிற அடிப்படையில் எல்லாவற்றையும் எழுதுகிறார்கள். ஆனால் இதுக்கு என்ன காரணம் என்று ஒருத்தரும் எழுதுறது இல்லை. போலி எதிர்ப்பாளர்களான NGOக்கள் முதல் லேட்டஸ்ட் ஒட்டுக்கட்சிகள் வரை ஒருத்தரும் சொல்றதுல்ல.
..
இதில் பத்திரிக்கை, இணைய தளம், ப்ளாக்குகள் உள்பட்ட தளங்களை பற்றி தான் இந்த பதிவு.
..
பொதுவாக இவர்கள்
  • விவசாயிகள் தற்கொலையில இருந்து இன்றைக்கு 2ரூ அரிசி வாங்க கூட வழியற்று மக்கள் அவதிப்படுவது வரை எதுக்குமே யாருடைய பொருளாதார கொள்கை, அதனை இந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திப்பது எது என எந்த அடிப்படை காரணத்தையும் எழுதுவது இல்லை.

இதுல பத்திரிக்கையினை முழுக்க லாபம் ஈட்டும் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.நாம என்ன தெரிஞ்சுக்கனும், படிக்கனும் என அனைத்தையும் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவர்களோட கைக்கூலிகள் தான் முடிவு செய்கிறார்கள்.

சரி அப்படி கூட செய்தியாக எல்லாவற்றையும் கொடுக்கிறார்களா என்றால் இல்லை. அதுலயும் அவர்களுக்கு பிரச்சினை என சிலவற்றை மறைத்து விடுகிறார்கள்......

இந்த அடிப்படையில் செய்திகளை கொடுத்துவிட்டு....கூடவே " நாடு வளர்ச்சி பாதையில் ஜெட் வேகத்துல போகுது" என்ற குடியரசு (மொம்மை) தலைவர் முதல் ஆட்சியாளர்கள் என அனைவரின் பேச்சுக்களையும் எழுதிகின்றனர்.

  • ஒருபுறம் 1 லட்சத்துகும் மேற்ப்பட்ட ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருக்கிறாங்க, இன்னொருபுறம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது

  • பெப்சிக்கும் கொக்க கோலாவுக்கு பைசா கணக்கில் தன்ணீரை கொடுத்த மன்மோகன் சிங இன்னொருபுறம் நம்ம விவசயிகளுக்கு தண்ணீரோட அருமை தெரியலை, பணம் கொடுத்து வாங்கினால்தான் தெரியும் என பேசிகிறார்.

  • டாஸ்மாக் கடையில் ஆண்டுக்கு 7000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால் சுனாமிக்கு 3 ஆண்டுகளுகு பின்னும் உலகவங்கியிடம் 1000 கோடி கடனாக கேட்கிறது தமிழக அரசாங்கம்.

  • ஒருபுறம் பெப்சி குடிக்காதே, புகை குடிக்காதே, மது அருந்தாதே,டாடாவுக்கு எதிர்ப்பு , வாரிசு அரசியல் கூடாது என தனித்தனி அறிக்கை....மறுபுறம் அனைத்தையும் தடை செய்யும் அதிகாரம் உள்ள் மக்களையே சந்திக்காத மத்திய அமைச்சர் பதவியில் மகன், மத்திய, மாநில அரசுக்கு முழு ஆதரவு இதுதான் ராமதாஸ்

இப்படி முரண்பாடுகளை தனித்தனியாக இருப்பதை ஒன்றுபடுத்தி பார்க்கும் போதுதான் தெரியும், இன்று மக்கள் மீது இந்த அரசாங்கம் மறைமுகமாக ஒரு போரையே தொடுத்து வருகிறது என்று.

இதற்கிடையில் இந்த முரண்பாடுகளை எல்லாம் பொருத்தி

  • இன்றைக்கு நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் இந்த மக்கள் நல (?) ஆட்சியாளர்கள் என்பதையும்
  • விவசாயிடம் இருந்து விவசாயம் பறிக்கப்பட்ட காலம் மாறி விவசாயத்திடம் இருந்தே விளைநிலம் பறிக்க பட்டு தொழிற்புரட்சி, வேலை வாய்ப்பு என்ற பேரில் அந்நியனுக்கு தாரை வார்க்கப் படுகிறது என்பது உள்பட

மக்களோட சகல கஷ்டங்கள் அனைத்துக்கும் என்ன காரண்ம், யார் காரணம் என்பதை தெரியப்படுத்த கூடிய பத்திரிக்கைகளும் இணையதளங்களும் உள்ளன. ப்ளாக்கர் உள்பட அனைத்து தளங்களிலும் போர்க்குரலாக ஒலிக்கிறது இது.

ஆனால் அடிமைத்தனத்திலேயே ஊறி திளைக்கின்ற சில அடிமைகள் ஆட்சியாளர்களோட முகமுடியாக செயல்பட முயற்சிக்கின்றன.

"நாட்டோட வளர்ச்சியை தடுக்குறாங்க, மேற்கு வங்காளத்தில் - பிற்போக்கு சக்திகள் ஒரு தொழிற்சாலை கூட வரவிடாமல் தடுத்து ரத்த ஆற்றை ஓட விட்டார்கள்; சும்மா 100 பேரை துண்டிவிட்டு; 100 பேருக்காக 10 ஆயிரம் பேருடைய வாய்ப்பு வசதிகளை குலைக்கின்றனர்" என்று இன்று ( 29 .7.07) டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் கொடுக்கிறதுக்கு எப்பவும் போல இது வளர்ச்சிக்குதான் என்ற அடிமுட்டாள்தனமான ஆட்சியாளர்களுடைய வாதத்தையே வைத்து கலைஞர் பேசியுள்ளார்.

நந்திகராம், சிங்கூர் போன்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் போலி கம்யூனிஸ்ட்களின் குரலை இந்த முற்போக்கு பெரியார் சீடர் வெளிப்படுத்தி உள்ளார்.

இன்றைக்கு தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் என்ற கொள்ளையினை ஏற்றுக்கொள்வதா , வேண்டாமா என்பதல்ல இந்த மன்மோன் சிங்,அத்வானி,போலி கம்யூனிஸ்டுகள், கருணாநிதி,ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்களுடைய பிரச்சனை. இதை எப்படி நடைமுறைபடுத்துவது எனபது தான் இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு.

இந்த சூழ்நிலையில் இவர்களோட முகமூடியாக சிலர் செயல்பட முயற்சிக்கின்றனர் .

உதாரணமாக தமிழகத்தில் இன்று டாடாவுக்கு 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தி தருவதற்கு அரசாங்கத்துக்கு ஒத்து ஊதக் கிளம்புகின்றனர்..

இதனை படிக்கும் அத்தகைய நபர்கள் மக்களநலனுக்கு எதிராக அவதூறாக எழுதுவதை கைவிட்டு - எழுதுவது; ஆரோக்கியமான ப்ளாகின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.

நமக்கு தேவை சமச்சீரான வளர்ச்சி என்கிறதை புரிஞ்சிக்க முயற்சிப் பண்ணுங்க...

இல்லைன்னா
..
"வளர்ச்சி....முன்னேறுது.....அரசியல் படுத்துறாங்க.....என்று தனித்தனியாக எழுதி மக்களை முட்டாளாக்காம உங்களுடைய வாதத்தை உடைத்து எழுதும் பதிவுகளுக்கு மறுத்து விளக்கமாக உங்க பதிவை போட (?) முயற்சி பண்ணுங்க.... "
..
அதுவிட்டுட்டு சும்மா மக்கள் நலனோட விளையாடாதீங்க.
********************************************
********************************************
Related:
*********

Labels: ,

1 Comments:

Blogger கோபா said...

test

10:15 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home