Saturday, September 08, 2007

சென்னை பாண்டிபஜாரில் அணுகுண்டு விழுந்தால் !

ராணுவ ஒப்பந்தம் என்ற பெயரில் 123 உள்பட நாட்டையே அடிமையாக்க கூடிய சரத்துகளுடன் அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்த ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.


வெள்ளைக்காரனுங்க ஆரம்பித்த காங்கிரஸ் என்கிற கம்பெனி நாட்டை விற்பதை வெகு விரைவாக செய்துகிட்டு இருக்கார்கள். பா.ஜ.க என்கிற மதவெறி கட்சி இதையே சொல்லி மீண்டும் ஆட்சியை பிடிக்க தயாராகி வருகிறார்கள். எதுக்கு இதே பணியை தொடரந்து செய்யத்தான்.


'என்ரான்' என்கிற கொள்ளைக்காரனை கொண்டுவருவதற்கு இந்த இரண்டு பேரும் சேர்ந்தே வேலை செய்ததை திரும்பி பார்த்தால் புரியும். அன்றைக்கு நரசிம்ம ராவ், அலுவாலியா, அடுத்து வந்த வாஜ்பாய், பால்தாக்ரே என்ற அடிவருடி லிஸ்டே என்ரானுக்கு வக்காலத்து வாங்கியது. குறிப்பாக இன்றைக்கு 123 யினால் ஆபத்து இல்லை என கூட்டம் போட்டு திரிகிற கார்த்திக் சிதம்பரம் என்கிற புதிய அடிமையின் அப்பா சிதம்பரம் தான் என்ரானின் வழக்கிலாக இருந்தவர்.


அடுத்து போலி கம்யூனிஸ்டுகள்...கேட்கவே வேண்டாம்...அப்பட்டமாக எதிரியாக மாறி ஆளும் வர்க்கத்துக்கு வேலை செய்கிறார்கள். 2 வருஷமாக ஒப்ப்ந்தத்தை பற்றி வாய்திறக்காமல் இப்ப எதிர்க்கிற மாதிரி நடிச்சுட்டு...அடுத்து கூட்டு ராணுவ நடவடிக்கையினை எதிர்க்க கூட்டம் போட்டு கொண்டு இருக்கிறாரகள். இப்படி கம்யூனிஸ்டு பெயரில் ஆளும் வர்க்க அடியாள் வேலை செய்கிறதுக்கு ஒரு கட்சி இந்தியாவில....இப்ப மட்டுமா...போலி சுதந்திர காலத்துல இருந்தே காங்கிரஸ் க்கு வாலாக செயல்பட்டவர்கள் ஆயிற்றே.


கூட்டு குழுவின் முடிவினை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கபில்சிபில் சொல்ல போலிகள் அப்படியெல்லாம் கிடையாது என்று இவர்களாகவே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.


123 ஒப்ப்ந்தமா? நிர்பந்தமா? என்று வெளியீடு போட்டு மக்களை குழப்புகிறாரகள். இவர்கள் அயோக்கியத்தனத்தை மூடி மறைக்க எப்படியெல்லாம் வித்தை காட்டுகிறார்கள் பாருங்க.

சரி விஷயத்துக்கு வருவோம்...அணுசக்தி ஒப்பந்தம் என்பது நாட்டை அடிமையாக்க கூடிய பல சரத்து இருக்கு, தற்போது வெறும் 3 சதவீதம் அணுசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை 7 சதவீதம் என்று 2020 ல் மாற்ற 5 லட்சம் கோடியினை போடப்போறேன் என்பது என அனைத்தையும் விட்டுட்டு பாதுகாப்பு என்கிற ஒரு விஷய்த்தை பார்க்கலாம்.


சுனாமி வந்தப்ப பார்த்தோமானால் 10 நாட்களுக்கு பிணத்தை கூட அப்புறப்படுத்த வக்கில்லாமல் இருந்தது அரசு.

  • படிப்பறிவு அற்ற மக்களுக்கு
  • பாதுகாப்பு பற்றி ஒன்றும் தெரியாத மக்களுக்கு

இவர்கள் அதிகப்படிய கொண்டு வர இருக்கும் அணுசக்தி உலைகள் என்பது நாளை விபத்துகுள்ளானால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் கீழே உள்ளது. இது கூட நாங்கள் சொல்லவில்லை, இப்படி நாட்டை மறுகாலனியாக்குவதற்கு தோல் கொடுத்து வரும் போலிக் கம்யூனிஸ்டுகளின் இதழ் ஒன்றில் தானுங்க இந்த செய்தி வந்துள்ளது.

Related:..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
.123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home