Saturday, August 11, 2007

எங்க நாடு ஆகுது வல்லரசு அமெரிக்கா போலே...


இன்றைக்கு நாடு வல்லரசு ஆகிவருகிறது என்ற மாயயை ஒருபுறம் தோற்றுவித்துக்கொண்டே மறுபுறம் நாட்டை படுவேகமாக அந்நியனுக்கு விற்று வருகின்றார்கள் இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்கள்.

நாட்டை பகுதி பகுதியாக அந்நியனுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தாரை வார்க்கிறார்கள், இன்னொருபுறம் அனைத்து துறைகளிலும் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிச்சு உள்நாட்டு தொழில்களை நாசமாக்குகின்றனர்,அனுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்கனுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கின்றனர்.

இதில் எந்த ஓட்டுக்கட்சிக்கும் கருத்துவேறுபாடு என்பதே கிடையாது.

உதாரணமாக தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையினை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்த மாட்டோம், உலக வர்த்த கழகத்தில் இருந்து இந்தியா வெளியேறும் என்பது போன்ற வாக்குறுதிகளை எந்த ஓட்டுக்கட்சிக்கார்களும் சொல்வது கிடையாது.

இன்றைக்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்குறோம்; அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்குறோம்; ரிலையன்ஸை எதிர்க்குறோம் என சொல்கிற எவரும் இதற்கனைத்துக்கும் அடிப்படையான மேலே உள்ள விஷயத்தை பற்றி மூச்சு கூட விடுவதில்லை.

ஏன்னா இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதையேதான் நடைமுறைப்படுத்த போகிறார்கள்.இப்பவே மற்ற மாநிலங்களிலும் தங்களுடைய கட்சி ஆட்சியிலும் இத்தகைய கொள்கைகள் தான் நடைமுறைப்படுத்துகிறது என்றும் இந்த ஓட்டுக்கட்சி ஆட்சியாளர்களுக்கு தெரியும்.

ஆக நாடு காலனியாக்கப்பட்டு வருவதில், காலனியாக்குவதில் காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள், தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க, சரத்குமார் என அனைவருக்கும் முழு சம்பந்தம்.
..
இதை எப்படி ஆக்குவது என்பதில் தான் தங்களுக்குள் வேறுபடுகின்றனர்.
..
இப்படிப்பட்ட நிலையிலும் இன்னமும் நாடு முன்னேறுது என்று கூறுபவர்கள் மேலே உள்ள "இந்தியாவின் 83 கோடி பேரின் தினசரி வருமானம் ரூ 20" என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
..
இனியும் இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் கலாம்களின் பேச்சை நம்பிக்கொண்டு கனவு காண முயல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

போராடுவதை தவிர வேறு மாற்று இல்லை என முகத்தில் அறைந்து சொல்கிறது தினமும் வரும் செய்திகள்.
Related :
..

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home